27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Friday, March 19, 2010
27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்


01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.
இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி
மேற்கூறிய வழிமுறை இல்வாழ்க்கைக் குறியது
“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்
நீத்தார் இறைவனடி சேராதவர்”
என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தீ – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Read more ...

விபூதியின் மகிமைகள்

Friday, March 19, 2010
சைவ சமய பெருமக்களிற்கு திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். திருநீற்றிற்கு விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்சை என பல பெயர்கள் உண்டு.


1. விபூதி - மேலான ஐசுவரியத்தைத் தருவது.
2. பசிதம் - அறியாமையை அழித்து, சிவஞான
சிவதத்துவத்தைத் தருவது.
3. சாரம் - ஆன்மாக்களின் மலமாசினை அகற்றுவது.
4. இரட்சை - ஆன்மாக்களை துன்பத்தினின்றும் நீக்கி பேரின்ப வாழ்வு தருவது
5. திருநீறு - பாவங்களை எல்லாம் நீறு செய்வது.


இதன் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவா என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மĪ 4;்திரத்தை செபித்தபடி உத்தூளனமாக (நெற்றி முழவதும்) அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடுகளாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும். கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள், குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.


விதிப்படியமைந்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் அசுத்தங்கள் அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்
உடலுக்கும், உயிரிற்கும் இம்மையிற்கும், மறுமையிற்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாம் அணிந்து உயர்வடைவோமாக.
Read more ...

மஞ்சள்,குங்குமம்,சந்தனம்

Friday, March 19, 2010
மஞ்சள்

நம் பண்பாட்டில் மஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள்.எல்லா முக்கிய விழாக்களிலும் மஞ்சள் இடம் பெறும்.
அந்தக் காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது சிறுவர் முதல் பெரியவர் வரை மேற்கொள்ளும் வழக்கத்தில் இருந்தது.பூப்பு நன்னீராட்டு விழா திருமணச்சடங்கு புதுமனை புகுவிழா ஆகிய மங்கள நிகழ்ச்சிகளில் மஞ்சள் கரைத்து தெளிக்கப்படுகிறது.மஞ்சளில் தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிள்ளையார் பிடித்து வழிபடுகிறோம்.இப்படியாக மஞ்சள் பலவிதத்திலும் நம் பண்பாட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.


மஞ்சளின் தாவரவியல் பெயர் Cucumalonga.மஞ்சள் ஒரு கிழங்கு! இதன் முக்கியமான தன்மை கிருமி அழிப்பு சக்தி.எத்தகைய கிருமிகளையும் அழிக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.இதன் காரணமாகவே பலவகை புண்கள் மீது மஞ்சள் வேப்பிலை கலந்து பற்றுப் போடும் நாட்டு வைதடதியம் இருக்கிறது.
ஊரஉரஅயடழபெயமேலும் மஞ்சளை பூசி குளிப்பதால் தோல் மினுமினுப்பாகும் பருக்கள் வராது தேவையற்ற ரோமம் வளராது என்னும் அனுபவ நன்மைகளும் உண்டு.

இந்த மஞ்சள் பற்றி நம் முன்னோர்கள் அன்றே அறிந்திருந்த உண்மைகளை நவீன உலகின் ஐரோப்பியரும் அமெரிக்கரும் அண்மையில் தான் அறிந்துள்ளார்கள்.
அமெரிக்க சுகாதார அறநிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி பண்டாரு ரெட்டி என்பவர் இது பற்றி ஆய்வு நடாத்தி சமயலில் பயண்படும் மஞ்சள் தூளில் கர்கியுமின் ( ) எனும் வேதவியல் கலவை உள்ளது, அது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்துள்ளார்.


குங்குமம்


மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து,பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும்.இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது.தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.நெற்றியில் புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.


நெற்றியின் புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.இதனை நெற்றிக்கண் எனலாம்.இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும்.தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.ஞானக் கண் என்றம் அழைக்கப்படும்.அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.


அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள்.அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர்.இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை.சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.

குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது.இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.


மின்கடத்தும் தன்மைநமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம்.குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள்.அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன்.


ஆர்த்தி
மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சள் கரைசலில் கொஞ்சம் சுண்ணாம்பை கலந்தால் அது சிவப்பு நிறமாக மாறும்.அதுவே ஆர்த்தியாகும்.இவ்வாறு கரைத்த ஆர்த்தியை அகன்ற தாம்பாளத்தில் ஊற்றி அதனை புதுமணமக்களின் முகத்துக்கெதிரே அல்லது புது வீட்டின் வாசல்படி முன்பு அல்லது மங்கள நிகழ்ச்சியின் முக்கிய நபரின் முன்பு காட்டி தட்டை மூன்று முறை சுற்றி பின் ஆர்த்தி நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுவார்கள்.
இந்த செயல்பாட்டில் பல அறிவியல் காரணங்கள் அடங்கியுள்ளன.

1.மஞ்சள் ஒரு கிருமிநாசினி.
2.ஒளியுடல் மீது பாதிப்பு.
3.மின் காந்த சக்தியலைகள் சீரமைப்பு.


சந்தனம்


குங்குமம் போலவே சந்தனமும் சக்தி வாய்ந்தது.கோயில்களில் திருநீற்றோடு குழைத்த சந்தனத்தையும் குங்குமத்தையும் கொடுப்பார்கள்.திருநீறு பூசி சந்தனம் இட்டு அதன் மேல் குங்குமத்தை வைப்பது நம் வழக்கம்.

சந்தன மரத்தில் இருந்து கிடைக்கும் சந்தன கட்டையை அரைத்து சந்தனம் தயாரிக்கப்படுகிறது.சந்தனம் அணிவதால் தெய்வீக உணர்வு மேம்பட்டு நினைத்ததை நிறைவேற்றும் மந்திர சக்தி அதிகரிக்கும்.மேலும் சந்தனம் தோலுக்கு மிகவும் நல்லது.சுத்தமான சந்தன தூளையும் கொஞ்சம் மஞ்சளையும் தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வைத்து காய்ந்த பின் முகத்தை கழுவினால் முகத்தோல் புதுப் பொலிவு பெறும்.
Read more ...

108 சித்தர்களும் - ஜீவ சமாதிகளும்

Thursday, March 18, 2010
1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.
Read more ...

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்

Wednesday, March 17, 2010
கிரகம்: சூரியன்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.
சூரியனார் கோவில் தொடர்பு எண்: 0435 -2472349.

கிரகம்: சந்திரன்
ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

கிரகம்: குரு
ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
கோவில் தொடர்பு எண்: 04374 -269407.

கிரகம்: ராகு
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்
கோவில் தொடர்பு எண்: 0435 - 2463354.

கிரகம்: புதன்
ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 256424.

கிரகம்: சுக்கிரன்
ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 0435 - 2473737.

கிரகம்: கேது
ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.
கோவில் தொடர்பு எண்: 04364 - 275222.

கிரகம்: சனி
ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 04368 - 236530.

கிரகம்: செவ்வாய்
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 279423.-
Read more ...

திருமால் பாடல்கள்

Wednesday, March 17, 2010
Read more ...

மூச்சுப் பயிற்சி

Wednesday, March 17, 2010
ஆயுளை நீடிக்கும் மூச்சுப் பயிற்சி
சுவாசப் பயிற்சியின் பலன்கள் எவை எவையென திருமூலர் கூறியுள்ளவற்றை இரு திருமந்திரப் பாடல்களின் வழியே கண்டோம். இனி மேலும் இரு பாடல்களைக் காணலாம்.

“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்

உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.’

-திருமந்திரம்- பாடல் எண்: 568.

உடலில் உயிர் இருக்கும் வரையில் சுவாசம் என்பதும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டேயிருக்கும். இதையே மாற்றிக் கூறுவதானால் சுவாசம் நடைபெறும் வரையில்தான் உயிர் உடலில் தங்கியிருக்கும். சுவாசம் நின்று போனால் உயிர் உடலை விட்டுப் பிரிந்து போகும். ஒரு மனிதன் உணவின்றி, நீரின்றி சில காலம் உயிர்வாழ முடியும். ஆனால் காற்று (பிராண வாயு) இல்லாது போனால் எட்டு நிமிடங்களுக்குமேல் உயிர்வாழ முடியாது. எனவேதான் உயிரை இயங்க வைக்கும் வாயுவை பிராண வாயு என்கிறோம். உயிர் பிரிந்துவிட்டால் “பிராணனை விட்டு விட்டான்’ என்று கூறுகிறோம்.

சுவாசத்தில் இரு பகுதிகள் உண்டு. காற்றை உள்ளே இழுப்பது (உள் சுவாசம்- ஒய்ள்ல்ண்ழ்ற்ஹற்ண்ர்ய்), காற்றை வெளியே விடுவது (வெளி சுவாசம்- ஊஷ்ல்ண்ழ்ஹற்ண்ர்ய்). காற்று உள்ளே சென்று வெளியே வரும் இந்தச் செயல் ஒரு அனிச்சை செயலாகும். நம்மை அறியாமலேயே நமக்குத் தெரியாமலேகூட இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது பாடலின் முதல் வரியைப் பாருங்கள்.

“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை.’

புறப்பட்டு (வெளியே சென்று- வெளிசுவாசம்), புக்கு (உள்ளே புகுந்து- உள் சுவாசம்), திரிகின்ற வாயுவை (சுவாசக் காற்றை)- இந்த வரியில் வருகின்ற “திரிகின்ற’ என்ற சொல்லில் ஆழமான அர்த்தங்கள் உள்ளன. எந்தவிதமான குறிக் கோளோ இலக்கோ நெறிமுறையோ இல்லாது இயங்குவதையே “திரிதல்’ என்கிறோம். “அவன் சும்மா ஊரைச் சுற்றித் திரிகிறான்’ என்று சொல்வதில்லையா?

மூச்சுப் பயிற்சி இல்லாதவர்களின் சுவாசமும் இவ்வாறே எந்தவிதமான இலக்கோ குறிக்கோளோ இன்றி, உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக வீணே “திரிந்து’ கொண்டிருக்கிறது.

“திரிதல்’ என்ற சொல்லுக்கு “தனது இயல்பு நிலையில் இருந்து மாறுபடுதல்’, “கெட்டுப் போதல்’, “வீணாகிப் போதல்’ போன்ற அர்த்தங் களும் உண்டு. “பால் திரிந்து போச்சு’ என்று கூறுகிறோம் அல்லவா? அந்த அர்த்தத்தின் அடிப் படையில் பார்த்தால், எவ்வித குறிக்கோளும் நெறி முறையும் இன்றி உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருக்கும் சுவாசம் தனது இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட அல்லது வீணாகிப் போன சுவாசமே ஆகும். (திரிந்த சுவாசம்).

அப்படியானால் “சுவாசம்’ என்பதன் இயல்பு நிலை என்ன? அதன் குறிக்கோள் அல்லது இலக்கு என்னவாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர் சுவாசத்தின்போது உடலின் உள்ளே என்ன நிகழுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

* உடலின் ஒவ்வொரு “செல்’லும் நலமாக இயங்க ஆக்சிஜன் எனும் பிராண வாயு அவசியம் தேவை.

* செல்கள் இயங்கும்போது பலவிதமான கழிவுப் பொருட்கள் உருவாகின்றன. இவற்றுள் மிக முக்கியமான கழிவுப் பொருள் கரியமில வாயுவாகும். (கார்பன்-டை-ஆக்ஸைடு).

*் உள்சுவாசத்தின்போது வெளியிலுள்ள- காற்றிலுள்ள பிராணவாயு நுரையீரல்களால் உறிஞ்சப்பட்டு ரத்தத்தோடு கலக்கிறது.

*் வெளிசுவாசத்தின்போது ரத்தத்தில் தேங்கி நிற்கும் கரியமில வாயு பிரிந்து வெளியேறுகிறது.

ஆக, சுவாசம் என்பதன் இலக்கு பிராண வாயுவை உடலுக்குள் கொண்டு வருவதும், உடலிலுள்ள கழிவுப் பொருளான கரியமில வாயுவை வெளியே அனுப்புவதுமே ஆகும். இந்தச் செயல் அனைவரது உடலிலும் இடையறாது நடந்து கொண்டுதானே இருக்கிறது? பின் ஏன் திருமூலர் “திரிதல்’ என்ற சொல்லை உபயோகப்படுத்தி யிருக்கிறார்?

நாம் உள்ளே இழுக்கும் காற்றிலுள்ள ஒரு சிறிய பகுதி பிராணவாயு மட்டுமே நுரையீரல்களால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. நுரையீரல்களில் தங்கியிருக்கும் கரியமில வாயுவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வெளிமூச்சின் வழியே வெளியேறுகிறது. எனவே செல்களுக்குத் தேவையான பிராணவாயு சரிவரக் கிடைப்பதில்லை. செல்களில் தேங்கி நிற்கும் கரியமில வாயுவும் முழுமையாக வெளியேற்றப்படுவதில்லை.

இதனால் என்ன நிகழும்? செல்கள் தனது முழுமையான திறனுடன் இயங்க இயலாது. பழுதடைந்த செல்கள் தம்மை சரிவர புதுப்பித்துக் கொள்ள முடியாது. இறந்துபோன செல்களுக்குப் பதிலாக புதிய செல்கள் உருவாவதில் சுணக்கம் ஏற்படுகிறது. இவை அனைத்தும் சேரும்போது பலவிதமான நோய்கள் உருவாகின்றன. முதுமை, தோல்களில் சுருக்கம், கண்களில் காட்டராக்ட் என்ற திரை ஆகியவை தோன்றுகின்றன. கேசத்தி லும் நரை விழத் துவங்குகிறது. இறுதியாக மரணம் வந்து தழுவிக் கொள்கிறது. இந்த மூச்சை நெறிப் படுத்தினால் என்ன நிகழும்? பாடலின் அடுத்த வரிகளைப் பாருங்கள்.

“…

நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்

உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்

புறப்பட்டு போகான் புரிசடையோனே.’

மூச்சுப் பயிற்சிகளின் மூலம் மூச்சை நெறிப்படுத்தி உடலின் உள்ளே பிராணவாயுவை நிரம்பச் செய்தால் (உள்ளே நின்மலம் ஆக்கில்) உடல் இளமை பெறும். தேஜஸ் உருவாகும் (உறுப்பு சிவக்கும்). நரை விழுந்துபோன கேசம் கூட மீண்டும் கறுப்பாகும். (உரோமம் கறுக்கும்). மொத்தத்தில் முதுமைக் கோலம் மறைந்து, இளமை திரும்பும். உடல் உறுதியாகும்.

இவற்றைவிட மிக முக்கியமான பலனை நான்காவது வரியில் குறிப்பிடுகிறார் திருமூலர். “புறப்பட்டு போகான் புரிசடையோனே.’ “புரிசடை யோன்’ (அழகிய சுருண்ட கூந்தலை உடையவன்) என்பது சிவபெருமானின் அடைமொழிகளில் ஒன்று. உடலினுள் இருக்கும் சீவன் அல்லது ஆன்மா சிவனின் (இறைவனின்) அம்சமே என்பது சித்தர்களின் கூற்று. எனவேதான் இங்கே உயிரை புரிசடையோன் என குறிப்பிடுகிறார். மூச்சுப் பயிற்சிகளின் மூலம் மூச்சை நெறிப்படுத்தி னால் உடலில் தங்கியிருக்கும் சீவன் வெளியேறாது! அதாவது மரணம் இராது! மூச்சை நெறிப்படுத்தும் வித்தை என்ன என்பதை அடுத்த இதழில் காணலாம். இனி அடுத்த பாடலுக்குச் செல்லலாம்.

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்

தெளியக் குருவின் திருவருள் பெற்றால்

வளியினும் வேட்டு அளியனும் ஆமே.’

-திருமந்திரம் - பாடல் எண்: 562.

தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வருபவர்களுக்கு முதுமை மறையும். உடல் காற்றைவிட லேசாகும் என்பதே இப்பாடலின் சுருக்கமான கருத்தாகும். இதை சற்றே விரிவாகக் காணலாம்.

“வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்’

“வளி’ என்பது காற்றுக்கு மற்றொரு பெயர். இந்தக் காற்றை உள்வாங்கி, வசப்படுத்தி (வயத்தில்) உடலில் தங்குமாறு செய்தால் (அடக்கில்), உடல் பளிங்குபோல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

வயது கூடுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒவ்வொரு வருடமும் ஒரு வயது கூடிக் கொண்டேதான் போகும். காலம் என்பது நில்லாதது. மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்குக்கூட வருடங்கள் செல்லச் செல்ல வயது கூடிக் கொண்டேதான் போகும். ஆனால் அவர்களது வயது ஏறினாலும் உடலில் முதுமையின் சின்னங்கள் (திரை, நரை போன்றவை) தோன்றாது. உடல் இளமையாகவே இருக்கும். இதை ஒரு அழகான உவமை மூலம் விளக்குகிறார் திருமூலர்.

“பழுக்கினும் பிஞ்சாம்.’

மிகவும் வயதானவர்களை “அவர் ஒரு பழுத்த பழம்’ என்று சொல்வதுண்டு. அதே உவமையை இங்கு பயன்படுத்துகிறார். வயதால் பழுத்திருந்தாலும் உருவத்தால் பிஞ்சாகவே இருப்பர்.

மூன்றாவது அடியில் “தெளியக் குருவின் திருவருள் பெற்றால்’ என குருவின் அவசியத்தை வலியுறுத்துகிறது. எந்தக் கலைக்கும் ஒரு ஆசான் தேவை. மூச்சுப் பயிற்சிக்கு நிச்சயமாக ஒரு நல்ல குருவின் மேற்பார்வை அவசியம். ஒரு குருவின் துணையோடு மூச்சுப் பயிற்சியைக் கற்றுக் கொண்டு, அவரது அருளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா? பாடலின் நான்காவது வரியைப் பாருங்கள்.

“வளியினும் வேட்டு அளியனும் ஆமே.’

இந்த கடைசி வரிக்கு இருவிதமான பாட பேதங்கள் உள்ளன. பாடபேதத்திற்கு ஏற்ப பொருளும் மாறுபடுகிறது. நாம் எடுத்துக்கொண்ட பாடபேதத்தின் பொருள்- தொடர்ந்து மூச்சுப் பயிற்சியைச் செய்துவருபவர்களுக்கு உடல் காற்றைவிட லேசானதாகும். அவனால் காற்றிலும் சஞ்சரிக்க இயலும் என்பதாகும். (வேட்டு= விரும்பும்போது, வளியினும்= காற்றை விடவும், அளி= மென்மையான).

மற்றொரு பாட பேதத்தையும் காண்போம்.

“வளியனும் வெட்ட வெளியனும் ஆமே.’

“வளி’ என்பது காற்று. உயிர் வாழ்வது என்பது காற்றை அடிப்படையாகக் கொண்டது. காற்று இல்லையேல் உயிர் (சீவன்) உடலை விட்டுப் பிரிந்து போய்விடும். எனவேதான் அந்த சீவனை “வளியன்’ என்கிறார் திருமூலர். இது ஜீவாத்மாவைக் குறிக்கிறது.

“வெட்ட வெளி’ என்பது எல்லை யில்லாத- ஒன்றுமில்லாத- சூன்யமான என்பன போன்ற பல அர்த்தங்களைத் தரும் ஒரு சொல்லாகும். எல்லையற்ற பிரபஞ்சத்தையும், அந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்கும் பிரபஞ்ச சக்தியையும் குறிக்கவே இங்கே “வெட்ட வெளி’ என்ற சொல்லை திருமூலர் பயன்படுத்தியுள்ளார். இது பரமாத்மாவைக் குறிக் கிறது.

குருவின் அருளோடு தொடர்ந்து மூச்சுப் பயிற்சி களைச் செய்து மூச்சை தன்வசப்படுத்த முடிந்த ஜீவாத்மா, பரமாத்மாவின் நிலையை எட்ட முடியும். ஜீவாத்மா என்பது அதிர்வுகள் குறைந்த ஒரு சக்தி நிலை. பரமாத்மா என்பது உயர் அதிர்வு சக்தி நிலை. தொடர்ந்த மூச்சுப் பயிற்சிகளால் உடலில் அதிக அளவில் பிராண வாயு செல்களில் தங்கும். ஒவ்வொரு செல்லும் தமது முழுத் திறமையோடு செயல்படத் துவங்கும். நாடிகளில் சக்தி தங்கு தடையின்றி பாயும். குண்டலினி எழும்பும். சக்கரங்களும் ஒவ்வொன் றாகத் திறந்து கொள்ளும். இறுதியாக சகஸ்ராரச் சக்கரம் திறந்து கொள்ளும்போது ஜீவாத்மா பரமாத்மாவோடு ஒன்றிய நிலை உருவாகும். மனிதனும் கடவுளாகலாம் என்ற அரிய சூட்சுமத்தையே இப்பாடலின் கடைசி வரியில் திருமூலர் மறைமுகமாகக் கூறியுள்ளார்.

அட்டமா சித்திகளில் ஒன்று “லகிமா சித்தி.’ இந்த லகிமா சித்தியைப் பெற்ற சித்தர்களால் தாம் விரும்பிய மாத்திரத்தில் தமது உடலைக் காற்றை விட லேசாக்கிக் கொள்ள முடியும். தரையில் கால்படாமல் மிதக்க முடியும். நீரின் மேல் நடக்க முடியும். காற்றில் பறந்து செல்லவும் முடியும். இப்பாடலின் கடைசி அடிக்கு, முதலாவது பாட பேதத்தை எடுத்துக் கொண்டால் “லகிமா சித்தி’ குறித்து திருமூலர் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டாவது பாட பேதத்தை எடுத்துக் கொண்டால் “மனிதனும் கடவுளாகலாம்’ என்ற சூட்சுமத்தை திருமூலர் விளக்குவதாகக் கொள்ளலாம். இரண்டுமே பொருத்தமுடைய விளக்கங்களாகவே தோன்றுகின்றன.
Read more ...

திருமந்திரம்

Wednesday, March 17, 2010
மூச்சுப் பயிற்சியினால் விளை யும் நன்மைகள் என்ன என்பதை திருமந்திரத்திலிருந்தே காணலாம்.

“புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்

கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்

துள்ளி நடப்பிக்கும் சோம்பர் தவிர்ப்பிக்கும்

உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.’

திருமந்திரம்- பாடல் எண்: 559

“புள்’ என்பது பறவையைக் குறிக்கும் சொல்லாகும். “புள்ளினும் மிக்க புரவி’ என்றால் பறவையைவிட வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை என்பது பொருள். பிராணனைக் குறிக்க குதிரை என்ற குறியீட்டை சித்தர்கள் பயன்படுத்தினர் என்பதை ஏற்கெனவே கண்டோம். ஆக, பறவையைவிட வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராண னாகிய குதிரையை நம்வசப்படுத்திக் கொண்டால் (மேற்கொண்டால்) என்னென்ன நிகழும்?

“கள் உண்ண வேண்டாம்; தானே களிதரும்.’

ஒருவித ஆனந்தமான மனநிலையை அடையவே மனிதர்கள் கள் முதலிய போதைப் பொருட்களை உண்கிறார்கள் அல்லவா? ஆனால் திருமூலரின் கூற்றுப்படி, பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் மூலமாக நமது பிராணனை நாம் வசப்படுத்திவிட்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலை உடலிலும் மனதிலும் உருவாகிவிடும்.

மூச்சுப் பயற்சியின் மூலமாக குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு நமது தலையின் மேற்பகுதி யிலுள்ள “லலான சக்கரம்’ தூண்டப்பட்டால், அந்த சக்கரத்திலிருந்து உருவாகும் “அமிர்தம்’ ஒரு எல்லையற்ற ஆனந்த நிலையை உருவாக்கும். இதையே “பேரானந்தம்’ என்கிறார்கள். இந்த ஆனந்த நிலையும் ஒருவகையான போதையே. ஒருமுறை அனுபவித்தவர்களுக்கு அந்த நிலை யிலிருந்து வெளியில் வரவே மனம் வராது. மீண்டும் மீண்டும் அந்த ஆனந்த நிலையையே மனம் நாடும். எனவேதான் வடமொழியில் இந்த நிலையை “ஆனந்த லகரி’ என்கிறார்கள்.

ஆக, பிராணனை வசப்படுத்துவதால் விளையும் முதல் பலன்- ஆனந்தமான மனநிலை உருவாகும். இது ஒரு பேரானந்த நிலை.

“துள்ளி நடப்பிக்கும், சோம்பர் தவிர்ப்பிக்கும்.’

ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைவது அவனிடத்தில் காணப் படும் சோம்பல்! பலர் பல நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டுவிடுவதற்குக் காரணமாக அமைவது மனதில் அல்லது உடலில் ஏற்படும் சோம்பல் தான்! பிராணன் எனும் குதிரையை நமது வசப்படுத்திக் கொண்டால் சோம்பல் மறையும். மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்பும் துள்ளலும் தானே ஏற்படும். வாழ்க்கை சிறக்கும்.

“உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.’

இதுவே உண்மை. அதைச் சொல்லிவிட்டோம். ஆனால் உணர்வுடையோர்க்கு மட்டுமே இந்த ரகசியம் புரியும் என்கிறார் திருமூலர். உயிரோடி ருக்கும் (மரம், செடி, கொடி, விலங்குகள் உட்பட) அனைத்துமே உணர்வு கொண்டவை தானே என்ற சந்தேகம் எழும். இந்தப் பாடலில் திருமூலர் குறிக்கும் உணர்வு என்பது “உள்ளுணர்வு’ அல்லது “மெய்ஞ்ஞானம்’ என்பதைக் குறிக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இனி அடுத்த பாடலைக் காணலாம்.

“பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்

பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை

பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப்

பிராணன் நடைபேறு பெற்று உண்டீரே.’

திருமந்திரம்- பாடல் எண்: 560

ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுக்கும், ஞானத் தேடலில் இறங்குபவர்களுக்கும் இறுதி யான குறிக்கோள் ஒன்றேயாகும். அது பிறப்பு- இறப்பு அற்ற முக்தி நிலை! வழிகள் வெவ்வேறாக இருந்தாலும் முக்தி நிலையை அடைவதே குறிக்கோளாக இருக்கிறது.

பிராணனும் மனமும் ஒன்றாக இணைந்து, ஒன்றில் ஒன்று அடங்கி ஒடுங்கும் நிலையை அடையும்போதுதான் பிறப்பு - இறப்பு இல்லாத நிலை உருவாகும் என்கிறார் திருமூலர்.

“பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்

பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை.’

“பேராது’ என்ற சொல்லுக்கு “விலகாது’ என்று பொருள். பிராணன் மனத்திலிருந்து விலகாமல் இரண்டும் ஒன்றாக இணைந்து அடங்க வேண்டும். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் வாயிலாகவே இது சாத்தியமாகும் என்கிறார் திருமூலர்.

நாம் சுவாசிக்கும்போது மூச்சுக் காற்றானது (பிராணன்) மேலிருந்து கீழாகவே செல்கிறது அல்லவா? இதுவே இயல்பான மூச்சு. ஆனால் இத்தகைய இயல்பான சுவாச முறையினால் முக்தி நிலையை அடைய இயலாது. பிராணன் தனது இயல்பான பாதையை விட்டு மாறி (மடைமாறி) மேல்நோக்கிச் சென்று ஆக்ஞை, லலானம், சகஸ்ராரம் ஆகிய உயர்நிலைச் சக்கரங்களை அடைய வேண்டும். அப்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலை உருவாகும்.

“மடைமாறி’ என்ற ஒரு சொல்லில் பல சூட்சுமங்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் சிறிய வாய்க்காலையே (ஈட்ஹய்ய்ங்ப்) “மடை’ என்பார்கள். மடை மாறி என்ற சொல்லுக்கு (மேலே கண்டபடி) கீழ்நோக்கிச் செல்லும் பிராணன் தனது பாதையிலிருந்து மாறி மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இது தவிர மேலும் இரு சூட்சுமங்கள் இந்த ஒற்றைச் சொல்லில் உள்ளன.

சுவாசம் என்பது இடது நாசி, வலது நாசி என மாறி மாறி வரும்; இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழும்

இது இயல்பான சுவாச நிலை. தொடர்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம், யோகாசனங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த இயல்பான நிலை மாறி (மடை மாறி) இடது நாசியில் மட்டுமே சுவாசம் செல்லும் நிலை உருவாகும்போதுதான் பிறப்பு- இறப்பு அற்ற நிலை உருவாகும். இது ஒரு சூட்சுமம். மேலும் ஒன்று உள்ளது.

இடது நாசியில் சுவாசம் செல்லும்போது இடகலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப்படியான பிராணன் பாயும். வலது நாசியின் வழியாகச் சுவாசிக்கும்போது பிங்கலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப் படியான பிராணன் பாய்ந்து செல்லும். இதுவே இயல்பான சுவாச நடை.

இந்த இயல்பு நிலை மாறி (மடை மாறி) ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் பிராணன் சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலையை அடைய முடியும். தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டு யோகக் கலையில் உயர்நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். பிராணன் தனது இயல்பான பாதையிலிருந்து “மடைமாறி’ (ஈட்ஹய்ஞ்ங் ர்ச் ஈட்ஹய்ய்ங்ப்) சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போது எல்லையற்ற பேரானந்த நிலை உருவாகும். யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே இது சாத்தியமாகும்.

இந்தப் பாடலின் மூன்றாவது வரியில் “பேச்சு அறிவித்து’ என்ற ஒரு சொல் வருகிறதல்லவா? அந்தச் சொல்லிலும் ஒரு மிகப் பெரிய சூட்சுமம் ஒளிந்து நிற்கிறது. அதைச் சுருக்கமாகக் காணலாம்.

சாதாரண - இயல்பான சுவாசம் நடைபெறும் வரையில் பேச்சு நிற்காது. மனம் ஒடுங்காது பிராணனிலிருந்து தனியாக நிற்பதால் மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். வாயும் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும். ஆனால் மூச்சு மடைமாறி பாயத் துவங்கும்போது சூட்சும உடலிலும் (சக்தி உடல்), பருவுடலிலும் சில மாற்றங்கள் நிகழும்.

* சுழுமுனை நாடியில் பிராணன் பாயும் போது மூலாதாரத்தின் அருகே உறங்கிக் கிடக்கும் குண்டலினி தட்டி எழுப்பப்படும்.

* இந்தக் குண்டலினி சக்தியானது சுழு முனை நாடி வழியே மேலெழும்பி சக்கரங்களை அதிக வலிமையுடன் இயங்கச் செய்யும்.

* முதலில் கீழ்நிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.

* தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்து வரும்போது இடைநிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.

* மேலும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது உயர்நிலைச் சக்கரங்கள் தூண்டப்படுகின்றன.

* ஒவ்வொரு சக்கரத்தையும் குண்டலினி இயக்கும்போது அந்த சக்கரத்தோடு தொடர்பு டைய பல சித்திகள் சாதகருக்குக் கிடைக்கும்.

* கீழேயுள்ள ஐந்து சக்கரங்களையும் கடந்து ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, “திரிகால ஞானம்’ எனும் சித்தி கிடைக்கும். கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங் களையும் உணர்ந்தவர்களையே, “முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்’ அல்லது திரிகால ஞானி என்கிறோம்.

ஆறாவது சக்கரத்தையும் கடந்து, ஏழாவது சக்கரமான சகஸ்ரார சக்கரத்தை குண்டலினி அடையும்போதுதான் பரமாத்மாவும் ஜீவாத்மா வும் இணையும் நிகழ்வு நடைபெறும். இந்த நிலையை அடைந்த மனிதன் கடவுளுக்கு இணையான சக்திகளையும் திறமைகளையும் கொண்டவனாக இருப்பான்.
இங்கேதான் ஒரு அற்புதமான சூட்சுமம் உள்ளது. ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரம் வரையில் ஒவ்வொரு சக்கரமும் குண்டலியினால் இயக்கப்படும்போது கிடைக்கப் பெறும் சித்திகளை ஒரு மனிதன் தன் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் ஆறாவது சக்கரத்தைத் தாண்டி குண்டலினி ஏழாவது சக்கரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு வேகத்தடை உள்ளது. அதன் பெயர் “தாமச நாடி’. குண்டலினி ஆறாவது சக்கரத்தைத் தாண்டிச் செல்லும்போது லலான சக்கரம் மட்டுமின்றி, இந்த தாமச நாடியும் தூண்டப் படுகிறது.

“தாமசம்’ என்ற சொல்லுக்கு தாமதம், சோம்பல், சுறுசுறுப்பின்மை, உள்ளே ஒடுங்குதல் என பல அர்த்தங்கள் உண்டு. இந்த தாமச நாடி தூண்டப்படும்போது அந்த மனிதரிடம் ஒரு பற்றற்ற நிலை உருவாகி வரும். எதிலும் ஒரு ஈடுபாடு இராது. ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிப் போகும். சித்து விளையாட்டுகள் எல்லாம் மறைந்து, தன்னுள்ளே ஒடுங்கி, ஒரு குழந்தையைப் போன்ற தன்மை அவர்களிடம் உருவாகிவிடும்.

தாமச நாடி தூண்டப்பட்டு விட்டால் பேச்சும் அடங்கிப் போகும். மிகமிகத் தேவை யான தருணங்களில் மட்டுமே பேசுவார்கள். பிற மனிதர்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் ஆசா பாசங்களிலிருந்தும் ஒதுங்கிப் போய் தன்னுள்ளே ஒடுங்கி, எல்லையற்ற ஆனந்த நிலையில் எந்நேரமும் திளைத்திருப்பார்கள். அவர்கள் நிறைந்த குடம்- இனிமேல் தளும்ப மாட்டார்கள்.

பிராணனும் மனமும் தனித்தனியே இருக்கும் வரையில்தான் “பேச்சு’. இரண்டும் ஒன்றிணைந்து தாமச நாடி தூண்டப்பட்ட பின் பேச்சு என்பதே இராது. இதையே “பேச்சு அறிவித்து’ என்ற இரு சொற்களில் திருமூலர் சூட்சுமமாகக் கூறிச் சென்றுள்ளார்.
Read more ...

குருவின் துணை

Wednesday, March 17, 2010
நாம் பிறந்தது முதல் இறப்பது வரையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்கிறோம். பல விஷயங்களைப் பிறர் சொல்லிக் கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம். சிலவற்றை பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்கி றோம். இவை தவிர சிலவற்றை இயற்கையை உற்று நோக்கியும்கூட கற்றுக்கொள்கிறோம். புதிதாக ஒன்றைக் கற்றுத்தரும் ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!

கல்விக்கு குருவின் துணை மிக அவசியம். அதைவிடவும் ஞானத் தேடலில்- ஞானம் தேடிய பயணத்தில் ஒரு குரு மிக மிக அவசியம். பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு குரு கட்டாயமாகத் தேவை. இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல் வலியுறுத்துகிறது.

“ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள

வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை

கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படும் தானே.’

(திருமந்திரம்)

“மனம்’ என்பதை “ஆரியன்’ என்ற சொல்லால் திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த மனமானது மிக நல்லதாம். இந்த மனதிடம் இரண்டு குதிரைகள் உள்ளதாம். முதல் பாடலில் ஒரு குதிரை உண்டு எனக் கூறிய திருமூலர் அடுத்த பாடலிலேயே இரண்டு குதிரைகள் உள்ளதாகக் கூறுகிறாரே, இது என்ன முரண்பாடு என்ற கேள்வி எழுகிற தல்லவா? இங்கேதான் மூச்சு குறித்த அடுத்த சூட்சும ரகசியம் பொதிந்து கிடக்கிறது.

முதல் பாடலில் “குதிரை’ என்பது மூச்சு அல்லது பிராணனைக் குறிக்கிறது. இந்தப் பாடலில் அது நமது இடது நாசி, வலது நாசி ஆகிய இரண்டையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம். இதுவே இரண்டு குதிரைகள். அல்லது இடது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை எனவும், வலது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை மற்றொரு குதிரை எனவும் பொருள் கொள்ளலாம்.

பிராணன் என்பது ஒன்றுதானே? வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்க முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் இப்போது எழுந்திருக்கும். ஆம்; இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன. எனவேதான் திருமூலர் அதைப் பாகுபடுத்திக் காட்ட இரண்டு குதிரைகள் என்றார்.

நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.

ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர் கள் கணித்து வைத்துள்ளனர்.

நேரம் நாசி

காலை 6-8 மணி வரை வலது நாசி

காலை 8-10 மணி வரை இடது நாசி

காலை 10-12 மணி வரை வலது நாசி

மதியம் 12-2 மணி வரை இடது நாசி

மதியம் 2-4 மணி வரை வலது நாசி

மாலை 4-6 மணி வரை இடது நாசி

மாலை 6-8 மணி வரை வலது நாசி

இரவு 8-10 மணி வரை இடது நாசி

இரவு 10-12 மணி வரை வலது நாசி

இரவு 12-2 மணி வரை இடது நாசி

இரவு 2-4 மணி வரை வலது நாசி

அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி


வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக் கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரிய கலை)

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.

* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.

* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.

* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவற்றை அடக்கும் சூட்சுமம் எவருக்கும் தெரிவதில்லை என்பதையே இந்தப் பாடலின் இரண்டாவது வரி தெரிவிக்கிறது.

“வீசிப்பிடிக்கும் விரகு (உபாயம், வழிமுறை) அறிவார் இல்லை.’

இந்த சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டு, பிராணன் எனும் குதிரைகளை வசப்படுத்த ஒரு குருவின் துணை வேண்டும். அந்த குருவும் நுண்ணறிவு படைத்தவராக, அந்தக் கலையில் முழுமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இந்தக் கருத்தே கடைசி இரு வரிகளில் வெளிப் படுகிறது.

“கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.’

இதில் “அருள் பெற்றால்’ என்ற சொற்களிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. குருவிடம் சென்று கற்றுக்கொள்வது வேறு; அவரது அருளைப் பெறுவதென்பது வேறு
Read more ...

திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம்

Wednesday, March 17, 2010
திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க முழுக்க “அஷ்டாங்க யோகம்’ என்பதைக் குறித்தே விவரிக்கிறது. பல சூட்சும ரகசியங்களை விளக்குகிறது. “அஷ்டாங்கம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு “எட்டு பிரிவுகள்’ என்பது பொருள். முழுமையான யோகக் கலையானது எட்டு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை முறையே-

1. இயமம்

2. நியமம்

3. ஆசனங்கள்

4. பிராணாயாமம்

5. பிரத்தியாகாரம்

6. தாரணை

7. தியானம்

8. சமாதி

இந்த ஒவ்வொன்றையும் குறித்து மிக விரிவாக திருமூலர் தனது திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். அவை அனைத்தையும் விவரிக்க வேண்டுமென் றால் பல பாகங்கள் கொண்ட ஒரு தனிப் புத்தகமே எழுத வேண்டியதிருக்கும். தற்போது “பிராணாயாமம்’ எனும் மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறியுள்ள சில உண்மைகளையும், சூட்சும ரகசியங்களையும் மட்டும் காணலாம்.

உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை “உயிர் மூச்சு’ என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல் போனால் எட்டு நிமிடங்களில் மரணம் நிச்சயம்! உடலின் இயக்கங்கள் அனைத்திற்கும் இந்த மூச்சுக் காற்றே ஆதாரம்.

“ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று
ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.’
Read more ...

விநாயகர் - சுலோகங்கள்

Wednesday, March 17, 2010
விநாயகரை வணங்குவோர் மேன்மைகளை அடைந்து இன்புற்று வாழ்வர்.

சுலோகம்-1

“முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்

கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்

அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்

நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்.’

விளக்கம்: திருக்கரத்தில் மோதகத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டிருப் பவரும், தம்மைத் தியானிப்பவர்களுக்கு எப்பொழுதும் மோட்சத்தைக் கொடுப்பவரும், சந்திரனை சிரசில் அணிந்தவரும், தம்முடைய வரலாற்றைச் சங்கீர்த்தனம் செய்து கொண்டு ஆனந்தமாக இருக்கும் அடியார்களையெல்லாம் காப்பவரும், ஆதரவில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் தாமே ஆதரவாக இருந்து காப்பாற்றுபவரும், கஜாசுரனைக் கொன்றவரும், தம்மைப் போற்றும் பக்தர்களுடைய பாவங்களை அக்கணமே துவம்சம் செய்ய வல்லவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.

சுலோகம்-2(பயன்)


“மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்

ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்

அரோகதாம தோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்

ஸமாஹிதாயை ரஷ்டபூதி மம்யுபைதி ஸோசிராத்.’

விளக்கம்: பஞ்சரத்தினம் என்னும் இந்த மகா கணபதி ஸ்தோத்திரத்தை எவர் ஒருவர் அனுதினமும் வைகறைப் பொழுதில் மகா கணபதியைத் தியானித்த வண்ணம் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் வெகு விரைவில் சகல வியாதிகளிலிருந்தும் எல்லா தோஷங் களிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல இசை ஞான மும், பாடும் திறனும் பெறு கிறார்கள். இவர்கள் உத்தம புத்திரர்களையும், தீர்க்கமான ஆயுளையும், அஷ்ட ஐஸ்வரியங் களையும் வாழ்வில் அடைவர்.

சுலோகம்- 3

“அகிஞ்ச நார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்

புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்

ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்

கபோலதாந வாரணம் பஜே புராண வாரணம்.’

விளக்கம்: தம்மைத் தியானிப்பவர்களின் வறுமை, துன்பம் போன்றவற்றை நாசம் செய்கிறவரும், வேத வாக்கியங்களால் போற்றப் படுபவரும், மகிமை பொருந்தியவரும், திரிபுர சம்ஹாரம் செய்தருளிய பரமேசுவரனுடைய மூத்த குமாரரும், தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் கர்வத்தை அடக்குபவரும், லோகங்களை நாசம் செய்கிற யமதர்மனுக்குப் பயத்தைக் கொடுப்பவரும், அர்ஜுனன் போன்ற வில்லில் வல்லவர்களான வீரர்களாலும் முதலில் வணங்கிப் போற்றப்படுபவரும், கபோலத்தில் ஏற்படும் மத ஜலத்தைப் பெருக விடுபவரும், புராதன கஜ சொரூபியுமான மகா கணபதியைத் தியானிக்கிறேன்.


சுலோகம்-4

“ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்

தரேதரோத ரம்வரம் வரேபவக்த்ர மக்ஷரம்

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்

மநஸ்கரம் நமஸ்க்ருதம் நமஸ்கரோமி பாஸ்வரம்.’

விளக்கம்: பதினான்கு உலகங்களிலுமுள்ள பக்தர்களுக்குப் பேரானந்தத்தைக் கொடுப்ப வரும், கஜாசுரனை சம்ஹாரம் செய்தவரும், சகல லோகங்களையும் வயிற்றுக்குள் வைத்து ரட்சிக்கும் பெருத்த வயிறுடன் தோற்றமளிப்ப வரும், சிரேஷ்டமானவரும், ஐராவதத்தைப் போன்ற முகப்பொலிவு பெற்றவரும், அழிவற்ற வரும், தம்மை வணங்குவோரின் பிழைகளைப் பொறுத்து அருள்புரிபவரும், அவர்களது மனதை நல்வழிப்படுத்தி அவர்களுக்குச் சந்தோஷத்தையும் நல்ல கீர்த்தியையும் அருளு பவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.

சுலோகம்- 5


“நிதாந்தகாந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்

அசிந்த்யரூப மந்தஹீந மந்தராய க்ருந்தநம்

ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்

தமேகதந்த மேகதம் விசிந்தயாமி ஸந்தகம்.’

விளக்கம்: மிகவும் அழகான பல் வரிசை களின் பேரொளியுடன் கூடியவரும், யமனுக்கும் மேலான பரமேசுவரருடைய குமாரரும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட சொரூபத்தை உடையவரும், அழிவற்றவரும், பக்தர்களின் சகல விக்னங்களையும் சம்ஹரிப்பவரும், தவசியர் களின் மனத்தில் சர்வசதா காலமும் வாசம் செய்பவரும், யானை முகத்துடன் இருந்தாலும் ஒரே தந்தத்தைப் பெற்றவருமான மகா கணபதியை எந்நேரமும் தியானிக்கிறேன்.
Read more ...

பூமியின் வயது

Friday, March 12, 2010
1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.
4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம்.
5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
6. இப்போது நாம காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின்
பொறுக்கு. சுமார் 25 மைல் வரை தான் இந்தப் பொறுக்கு.
7. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
8. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும்
இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக்
கொண்டிருக்கும்.
9. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
10. இதையெல்லாம் தோண்டிப் பார்க்க நம்மிடம் ராட்சஸ இயந்திரங்கள் இல்லை.
ஆனால், ரஷ70 அடிவரை அதிக ஆழம் தோண்டிப் பார்த்திருக்கிறார்கள்.
11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம்
செய்கிறோம்.
13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து
போகிறோம்.
14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23
மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும்..(அதாவது 365
நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.) 16. சந்திரனோ
பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில்
பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
18. பூமியிலிருந்து சற்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு
அப்பால்இருக்கிறதது.
19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம்
மேற்பரப்பில் தான் உயிரினங்கள் வாழ்கின்றன. (பூமியின் ழுழுப்பரப்பின்
70.8 விழுக்காடு கடல்கள்.மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.)
20. பூமியின் மேற்பரப்பை நான்கு கோளங்னாகப் பிரிக்கலாம். 1.
பாறைக்கோளம்.2. நீர்கோளம். 3. வளிமண்டலம் (யவஅழளிhநசந) உயிர்கோளம்
எத்தனை பிரயாணங்கள் ?

21. தன்னைத்தானே சுற்றும் பிரயாணம்!
22.சூரியனை சுற்றும் பிரயாணம்!
23. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்கள் இவற்றோடு
சேர்ந்து செய்யும் பிரபஞ்சப் பிரயாணம்.! இங்கேயும் முடிவில்லை.
24. பிரபஞ்சம் முழுமையாக சேர்ந்து அண்ட வெளியில் வெளிநோக்கி வளைய
மடித்துக்கொண்டு போகும் பிரயாணம்!

ஆக நான்கு பிரயாணங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். அதே நேரம் நாம்
எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலே நிம்மதியாக உறங்கிக்
கொண்டிருக்கிஙோம்.

25. நாம் நினைப்பது போல் பூமி ஒன்றா ? ஒரே ஒரு பூமி மட்டுமல்ல. ஒரு சூரிய
குடும்பத்துக்கு ஒரு பூமி. உலகில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சூரிய
குடும்பத்துக்கும் ஒவ்வொரு பூமி உள்ளது. ஒரு பால் வெளியில் (புயடயஒல) 200
பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. பால் வெளி என்பது ஒன்றா? நூறா ?
அதுவே 200 பில்லியன் பால் வெளிகள் உள்ளன. அப்டியானால் உலகில்
எத்தனை பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும். படைத்தவனுக்கே வெளிச்சம்.
Read more ...

அதிசயப் பிரபஞ்சம்.....

Friday, March 12, 2010
பிரபஞ்சம் ஒன்றில்லை !
பல்வேறு !
காலமற்ற பிரபஞ்சமே
கருவாகி
உருவாகி உள்ளது !
காலத்துக்குத் துவக்கம் இல்லை !
முறிந்த கருந்துளையால்
பிறக்கும்
சேய்ப் பிரபஞ்சம் !
மாண்ட பிரபஞ்சம் அடுத்து
மீண்டெழும் !
ஆதி அந்த மற்ற
காலத் தூரிகை போடும்
கோலம்
மூலமும் முடிவு மில்லாப்
பிரபஞ்சம் !
பிரபஞ்சம் முறிந்து புதிதாய்ப்
பிறக்கும் !
உதித்த பிரபஞ்சம்
உப்பி விரிந்து வெப்ப இழப்பில்
சப்பிப் போகும் !
பிரபஞ்சம்
புத்துயிர் பெறக் கருந்துளைக்கு
வித்துள்ளது !
உயிரினங்கள் தோன்றி
மடிவது போல்
முடிவடையும் பிரபஞ்சம் !
புரிந்தும் புரியாய வேதமாய்ப்
புதிருக்குள் புதிராகும்
அதிசயப் பிரபஞ்சம் !
Read more ...

நான்கு சிவராத்திரிகள்

Friday, March 12, 2010
முத்தொழில் செய்யும் மூன்று கடவுள்களுள், சிவனது பொறுப்பில் வருவது இறப்பு போன்ற உறக்கம். அதே போல் உயிர்களை விழிக்கச் செய்யும் நேரம் பிரமனது தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும் நேரம். உயிர்கள் தத்தம் கடமைகளையும், செயல்களையும் செய்யும் நேரம், காக்கும் தெய்வமான விஷ்ணுவின் நேரம்.

இதன் அடிப்படையில்தான் நாளைப் பகுத்துள்ளனர் பெரியோர். விடிகாலை 4 மணி முதல் 8 மணி வரை (1 மணி = 1 ஓரை = 2 1/2 நாழிகைகள்) உள்ள நேரம் நான்முகப் பிரமன் செயலாற்றும் நேரம். அந்நேரத்தில் செய்யும் நியமங்கள் சத்துவத்தை அதிகப்படுத்துவன. அந்நேரத்தில் உட்கொள்ளும் உணவு சுறுசுறுப்புக்கும், உடல், மன வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.

காலை 8 மணி முதல் முன்மாலை 4 மணி வரை விஷ்ணுவின் நேரம். இந்த நேரத்தில் உடலும், உள்ளமும் நன்கு உழைத்து, செயலாற்ற ஒத்துழைக்கும்.

மாலை 4 முதல் இரவு 8 மணி வரை மீண்டும் பிரமனின் நேரம். பிரமன் தொழிலாக, மீண்டும் உடல் மற்றும் மனதின் புத்துணர்வுக்கு ஓய்வும், உணவும் உடலில் ஒட்டும் நேரம் இது.

இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வதுதான் நல்லது. அதன் பிறகு, இரவு 8 மணி முதல், காலை 4 மணி வரை சிவனது நேரம். செயல்பாடுகள் நின்று, இறப்பு போன்ற தூக்கத்தில் அமிழும் நேரம் அது.

நம் உடலுறுப்புகளின் செயல்பாடும் இப்படியே மூன்று தெய்வங்களது செயல்பாட்டினை ஒட்டியே அமைவதால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மூன்று தெய்வங்களின் அம்சமும் உள்ளன. ஒவ்வொரு மனிதனும் மூன்று தெய்வங்களின் அருளால் ஒவ்வொரு நாளும் மூன்று நிலைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மூன்று தெய்வங்களும் அவன் உடல், மன நிலைகளை மேற்பார்வை பார்க்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றுள், அழித்தல் கடவுளான சிவனது நேரம் இரவாக இருக்கவே ஒவ்வொரு இரவும் சிவராத்திரிதான். அழித்தல் என்று எல்லாவற்றையும் ஒடுக்கி விடுவது போன்ற இந்தத் தொழிலின் முக்கிய அம்சம், அழித்தல் மட்டும் அல்ல. அழித்தல் போன்ற உறங்கும் நிலையிலும், நம் உள் மனம் விழித்திருக்கிறது. நாம் அறியாத நிலையில் உள்ளே சலனங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கே தான் மஹா சிவராத்திரியின் முக்கியத்துவம் வருகிறது. அது என்ன என்று பார்ப்பதற்குமுன், மற்ற மூன்று சிவராத்திரிகளைப் பார்ப்போம்.

இரண்டாவது சிவராத்திரி
மாத சிவராத்திரி எனப்படுவது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்தசியில் வருவது. இதுவும் ஒருவித அழித்தலைக் குறிப்பது. பௌர்ணமியில் ஒளிர்ந்த சந்திரன், தேய்ந்து முழுவதும் மறைவதற்குமுன் வரும் ராத்திரி மாத சிவராத்திரி ஆகும்.

மூன்றாவது சிவராத்திரி
வருடம்தோறும் மாசி மாதம் தேய்பிறையில் முதல் 13 நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது.

அது முடிந்த 14-ஆம் நாள் வரும் மகா சிவராத்திரி, 4-ஆவது சிவராத்திரி ஆகும்.
Read more ...

வேதம்

Monday, March 1, 2010
பாரத நாட்டில் வாழும் மக்கள் கடவுள் பதத்தை
அடையும் வண்ணம், நூல்கள் மஹான்களால் அநுபவ வாயிலாய்
எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே,
ஞானமார்க்கத்தின் இரகசியங்களை வாயினால்
ஒருவருக்கொருவர் சொல்லி வந்தார்கள். பின்பு பீஜங்களை
ஏற்படுதிய பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக்கொண்டு
தாங்கள் அநுபவித்த மகத்தான இரகசியப் பொருளைப்
போதிக்கவேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து,
ஜீவர்களிடத்தில் வைத்திருந்த கருணையினாலேயே
உபதேசித்து வந்தார்கள். அவ்விதமாக வெளிப்பட்ட நூலே
வேதமாகும்.

இதுவே முதல் நூலாக விளங்குகிறது. இவ்வேதத்தை
அறிந்தனுபவித்த ஞானிகளும் பெரியோர்களும் இதன்
மூலமாகக் கிடைத்த அனுபவத்தினால் சார்பு நூல்களை
இயற்றினார்கள். வேதசாரம் ஞானிகளால் ஆறு உப
அங்கங்களாகப் பிரிக்கப்பட்டன. அவைகளில்,
முதலாவதாகிய சிக்ஷை என்னும் அங்கத்தைத் தழுவியே
வேதங்கள் அனுசரிக்கப்பட்டு வந்தன. கடவுளைக் காண வழி
இரண்டென வகுத்து, அவை சுரம், சரமென உணர்த்தி,
அவைகளை நாதத்தின் மூலமாகவும், பிராணாபான
வயுக்களின் மூலமகவுமே அடையமுடியுமென்று உணர்த்திப்
பாக்களைப் பாடிவைத்தார்கள்.

அது போலவே, ஓங்கார சொரூபமாகிய நம் நாட்டின்
(இந்தியாவின் மேல் ஓம்மைப் பொருத்திப் பார்க்கவும்)
வடபுலத்தில் உறைந்த ஞானிகளால் சத்தி அம்சமாகிய
சமஸ்கிருதமென்னும் மொழியானது பரவித்தைக்கு மட்டும்
உபயோகப்படுத்தப்பட்டு வந்த்தது. ஆனால் அந்த மொழி
பேசுவதற்கு உபயோகப்படவில்லை என்பதால்,
அம்மொழியினின்றும் இந்தி,மராட்டி,குஜராத்தி முதலிய
வடபுலத்து மொழிகளை உண்டாக்கிக்கொண்டு, ஞான
கர்மாவாகிய ஆத்ம வித்தைக்குச் சமஸ்கிருதத்தையே
தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். இப்படியிருக்க,
தென்புலத்தில், சிவமொழியான தமிழ் ஓங்காரபீஜமாகத்
தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதில் அனேக மேதாவிகள்
பிறந்து உலகுக்குத் தாங்கள் அநுபவித்த ஆனந்தமாகிய
இரகசியத்தை வழிநூலாக்கி வழங்கினார்கள்.

தமிழை ஆதாரமாகக் கொண்டு பீஜத்தைத்
தமிழிலிருந்தும் சப்தத்தை சமஸ்கிருதத்திலிருந்தும்
எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக் கிரந்தம் என்னும்
மொழியை உண்டாக்கினார்கள். தமிழையே ஆதாரமாகக்
கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தியிருக்கும்
ஞானிகளின் போக்குகளை, நாம் அநுபவித்துத்தான்
உணரமுடியுமே தவிர, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப்
படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று. அதனால்,
ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால்
ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே
எதிர்பார்க்கும் மற்றவர்கள்
கதி(மூச்சோட்டம்)யினாலேற்படும் குற்றத்தையும் அடைவர்.

வேதாந்த விசாரணை என்பதைச் சத்திர விசாரணையோடு
நிறுத்திக்கொள்ளுகிறார்களே தவிர தம் உற்பத்தியைப்
பற்றியும், பஞ்சபூதங்களை மானுட உடலில்
சம்பந்தப்படுத்தியிருக்கும் இரகசியங்களையும், நாதபிந்து
கலைகளின் இரகசியங்களையும், இன்னும் மற்றவைகளையும்
ஆராயாமல் விட்டு விடுகின்றனர். சாத்திரங்களைப் படித்து
அறிவதை விட, தன்னை அறியவேண்டி ஆராய்ச்சியின்
மார்க்கத்தில் சென்றால்தான் சூட்சும தத்துவங்களை
அறியமுடியும். கண்ணலே பார்க்காமல் அநுபவத்திற்குக்
கொண்டு வந்துணருவது முடியாத ஒன்று.

"தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்"

என்பதை அலசி ஆராயாமல் விட்டதே உண்மை ஞானம்
மறைபட்டதிற்குக் காரணம்.

அதற்கு எடுத்துக்காட்டாக, வீடுகளிலும் ஆலயங்களிலும்
(ஆன்மா லயிக்கும் இடங்களிலும்) கடவுளை வணங்கும்போதும்,
கற்பூரம், சாம்பிராணிப்புகை, தேங்காய் இம்மூன்றையும்
உபயொகப்படுத்துவது எதற்கு? கடவுளை
மகிழ்விப்பதற்காக என்று கூறி வாழ்நாளை வீணாக்கி
வருகிறோம். இவைகளுடைய தத்துவங்கள்(உண்மைகள்)
இரகசியமாக மறைக்கப்பட்டு இருக்கின்றன.
மறைக்கப்பட்டிருப்பதால்தான் வேதங்கள் மறைகள்
எனப்பட்டன.
கடவுள் தூபதீபங்களுக்கும் தேங்காய்க்கும் ஆசைப்படுபவரா?
சர்வ வியாபக மூர்த்திக்கு இச்சையுண்டா? இந்த அற்பப்
பொருள்களைக்காட்டி அவருடைய அருளைப் பெறமுடியுமா?
தேங்காய், மாயையாகிய மட்டையினால் மறைபட்டும்,
பற்றாகிய நாரினால் கட்டப்பட்டும், ஆசையாகிய
சிரட்டையினால் மூடப்பட்டும் இருக்கின்ற உண்மையாகியது
(உள்+மெய்) சிவம். அதனுள் இருக்கும் நீராகிய
சத்தியும், இரண்டும் சம்பந்தப்பட்டபின் உண்டாகிய உடலில்
ஓடும் ஜீவன் சாம்பிராணிப் புகை. பிராணண் ஒளியைப்
பிரகாசிப்பதையும், மன அசைவை நிறுத்துவதற்கும் கற்பூர
ஒளியைக் காட்டினார்கள். இவைகளை அறிந்து உணர்வதே
கல்வியின் பயன்.

இதைப்போலவே மறைக்(கப்பட்டுள்ள)கருத்துக்களை, நம்
நாட்டின் உருவமைப்பிலும், நம் சரீர அமைப்பிலும்,
தெய்வமைப்பிலும், உற்சவகிரியைகளின் அமைப்பிலும்,
தெய்வ ஆலயங்களுள்ள ஊர்ப்பெயரின் அமைப்பிலும்,
மனிதர்களின் பெயரமைப்பிலும், வீட்டுச்சுத்தி,
தேகசுத்தி, ஆகாரசுத்தி முதலிய அமைப்பிலும் ஞானிகள்
நூல்களின் சாரங்களாகத் தந்திருக்கின்றனர். இவைகளைப்
புரிந்துகொண்டால் நூல்களின் கருத்துக்கள் எளிதில்
விளங்கும்.

ஆத்மவித்தையானது உலகத்தில் சஞ்சரிக்கவும், யோகம்
என்னும் தந்திரத்தை(தன்+திறத்தை) அறியாமல்
மனங்கலங்கும் சீவப்பிறவியற்க்குப் பேருதவியாக இருக்கும்
என்னும் எண்ணத்துடன் எனக்குப் புரிந்தவரை
விளக்கப்பட்டுள்ளது.
Read more ...

உடல் கூறுகள்

Monday, March 1, 2010
நாடிகள்

(உடலில் உள்ள நிலையை நாடுவதால் இப்பெயரிட்டனர்)
இவை உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய்
பேய்ச்சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம் 72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்க்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன.

தலயில் ………………………7,000
வலது காதில் ……………1,500
இடது காதில்……………. 1,500
வலது கண்ணில்……… 2,000
இடது கண்ணில் ……….2,000
மூக்கில் ………………………3,330
பிடரியில் …………………..1,000
கண்டத்தில் ……………….1,000
வலது கையில்………… 1,500
இடது கையில் ………….1,500
தொண்டைக்கும்
நாபிக்கும் மத்தியில்.. 8,990
பிடரியின் கீழ் ……………8,000
விலாவில் ………………….3,000
கால்களின் சந்தில்…… 8,000
பீசத்தின் மேல் …………..2,000
பீசத்தின் கீழ் ……………….2,000
பாதத்தில் …………………….1,000
பிடரிக்குப் பின்னால்…. 3,680
கோசம் ……………………….13,000
********************************
ஆக நரம்புகள் …………..72,000
********************************
பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றன. இதிலும் இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

இடகலை – வாத நாடி
பிங்கலை – பித்த நாடி
சுழிமுனை – சிலேத்தும நாடி

இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.

இ(டை)ட கலை – இடது நாசியினுள்ளே செல்லும் கற்று. இதுவே சந்திர நாடி. சக்தி நாடிஎன்போருமுண்டு.

பிங்கலை – வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி, சிவநாடிஎன்பர்.

சுழிமுனை – அக்கினி நாடி. இடத்திற்கு இடம் மறுபடும்.

அதாவது அண்டம், பிண்டம், சூக்குமம், அதி சூக்குமம்.

அறிவாலுணர்வது அண்டம்.
உணர்வாலுணர்வது பிண்டம்.
நினைவால் உணர்வது சூக்குமம்.
கருத்தில் நிற்பது அதிசூக்குமம்.

சிகுவை – உள்நாக்கு நரம்பு
புருடன் – வலக்கண் நரம்பு
காந்தாரி – இடக்கண் நரம்பு
அத்தி – வலது காது நரம்பு
அலம்புடை – இடக் காது நரம்பு
சங்கினி – ஆண்(பெண்) குறி நரம்பு
குகு – குத நரம்பு
ரக்தவியானன் – இனப்பெருக்கத்திற்குறிய சுக்கிலம், முட்டை ஆகியவைகளை வெளித் தள்ளும் நரம்பு.
Read more ...

வழிபடும் முறை

Monday, March 1, 2010
உலக உயிர்களில் மனிதன் மட்டுமே அனுபவத்தை பதிவு செய்து கொள்ளும் அற்புத சக்தியை பெற்றுள்ளான். எனவே தான், இம்மனித தேகமே அருளனுபவம் பெற்று உயர்வு அடை உயரிய படைப்பாக ஞானிகளால் கூறப்பட்டுள்ளது.

அப்பேர்ப்பட்ட உயர்ந்த அனுபவத்தை மனிதன் உலகியல் வாழ்விலிருந்து, பெற்றுக் கொள்கிறான். ஒருவர் தனக்கு வந்த அனுபவத்தை எந்த அளவு தனது மனதில் பதிவு செய்து கொள்கிறாரோ அந்த அளவில் அவர் ஞான நிலையை அடைந்துள்ளார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இயலும்.

அப்படி என்றால் அந்த அனுபவம் மனிதனுக்கு இருவகையில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்று, இல்லற பந்தத்தில் சிக்குண்டு, உலகியல் ஈடுபாடுகளில் அதிகமாக மனதை செலுத்தி மிகவும் அல்லல்பட்டு அதனால் வரும் அனுபவம்; இந்த நிலை அனுபவம் உலகியலில் மனிதனாய் பிறந்தவர் அனைவருக்கும் பொதுநிலை.

மற்றொரு அனுபவம் என்பது, உலகியலில் பிறர்படும் இன்னல்களை உற்று கவனித்து அந்த இன்னல் அவர்களுக்கு எதனால் வருகிறது என்பதை சிந்தித்து தெளிந்து, அந்த அனுபவங்களை மனதில் பதிவு செய்து கொள்வது. இதுவே உயர்ந்த நிலை அனுபவம். இந்த நிலை அனுபவம் மனிதனுக்கு வரவேண்டுமானால் மனிதன் “நிதானத்துடனும்” பொறுமையுடனும் உலகியல் நிகழ்வுகளை கவனிக்க வேண்டும்.

இந்த அனுபவ நிலைகளை, தன்னுள் பதிவு செய்து, பிறருக்கும் பயன்படும் வகையில் எடுத்துரைப்பவர் தத்துவ அறிஞர்களாக விளங்குபவர்கள். மேலும், தான்பெற்ற அனுபவங்கள் அனைத்தும், இந்த உலக மக்கள் தெரிந்து கொண்டு, அவர்களும் நல்ல நலமான வாழ்வு வாழ வழிகாட்டுபவர் இவர்களே ஞானிகள் என்று போற்றப்படுவர்கள்.

உற்ற நோய் நீக்கி உறா அமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

- குறள் - 442.


இக்குறளின் பொருள்: வந்த துன்பத்தை நீக்கி, இனி துன்பம் வராதபடி முன்னராக அறிந்து காக்க வல்ல தன்மை உடையவரைப் போற்றி நட்பு கொள்ள வேண்டும் என்பது இதன்படி நன்கு அனுபவம் பெற்று, உலகியல் வாழ்வில் அதிக இச்சை இல்லாத ஞானிகளை நட்புக் கொண்டால் நாம் துன்பங்களை எதிர்க்கொண்டு வென்று நலமாய் வாழலாம். அப்படி உயர்ந்த அருங்குணங்களைப் பெற்ற ஞானிகளாக, திருமூலர், திருவள்ளுவர், ஔவையார், வள்ளலார் போன்ற பற்றற்ற ஞானிகளை நட்புக் கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் இயற்றிய நூல்களை படித்து அதன்படி வாழப்பழகுதல் வேண்டும். அப்படி வாழப் பழகும்பொழுது நாம் அவர்களை நட்புக் கொள்ள இயலும்.

அப்படி ஞானிகளை நட்புக் கொண்டால், இந்த உலகியல் வாழ்வில் வரும் துன்பங்களை முன்னராகவே தெரிந்து கொண்டு அந்த துன்பங்களிலிருந்து நம்மை நாம் விடுவித்து வாழ்ந்து நாம் அருள்நிறை அனுபவங்களைப் பெற இயலும் என்பதே உண்மை நிலை. ஞானிகளை நட்புக் கொள்ளும் போது இயற்கையாகவே அதே கொள்கையில் வாழும் பல நல்லவரின் தொடர்பு நமக்கு ஏற்படுவது இயல்பு. அப்படி நல்ல நெறிகளை ஏறறு வாழும் அன்பர்களின் உறவுகளால் நாம் மென்மேலும் உயர்வடைய இயலும்.

மனம் தூய்மை செய்வினை தூய்மைஇரண்டும்
இனம் தூய்மை தூவா வரும்.
- குறள் – 455.


ஒருவர் நல்லவனாக போற்றப்படுவதற்குக் காரணம் அவரது மனதின் தூய்மையும், செய்யும் செயலின் தூய்மையுமாகும். இது அவர் சேர்ந்த இனத்தை சார்ந்தே அமையும். இங்கு இனம் என்பது சாதிகளைப் பற்றி குறிப்பிடப்படுவது இல்லை. நல்ல நெறிகளைச் சார்ந்து வாழ்பவர் நல்ல இனத்தை சார்ந்தவர். தீயநெறிகளைப் பின்பற்றி வாழ்பவர் தீய இனத்தைச் சார்ந்தவர் ஆவர்.

எனவே, நாம் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட அன்பர்களுடன் பழகினால் நாம் நல்லினத்தை சார்ந்து நலம் பெறலாம். உலகில் இதுவரை தோன்றிய அமைப்புகள் அனைத்தும் சாதி, சமய அடிப்படையில் அமைந்ததால் ஒருவர் எவ்வளவு தான் நல்லவராய் இருந்தாலும், சாதி, மத, சமய அடிப்படையில் சிக்குண்டு பல சூழ்நிலைகளில் தவறுகளைச் செய்து வருகின்றனர். ஆனால், எந்தவித சமய கோட்பாடுகளிலும், உடன்படாத “சுத்த சன்மார்க்க நெறி” ஒன்று தான் நாம் இன்றைக்கு உலகில் காணும் நல்லினமாகும். எனவே வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறி என்பது, இதுவரை உலகில் தோன்றிய ஞானிகள் அனைவரும் அவ்வப்பொழுது தந்த நல்லநெறிகளை எல்லாம் உட்கொண்ட பொதுநெறியாகும். இந்த உலகியல் பொதுநெறியில் மட்டுமே, ஆன்ம நேயம், ஜீவகாருண்யம், தியானம், தவம், உயிர்நலப்பணி, பக்தி என்ற அனைத்து நிலைகளும் ஒருங்கே கூறப்பட்டுள்ளது.




வழிபடும் முறை (சாதனஇயல்)

இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும்.
இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அ•தாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும்.

கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது அஞ்செழுத்து மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் படனம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும்.

யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது. அதாவது வழிபடு தெய்வத்தின் வடிவத்தை மனத்தில் வைத்து தியானிப்பது. அந்தரியாக பூசை செய்வது, அஞ்செழுத்து மந்திரத்தை உள்ளத்தால் அக்குமாலை கொண்டு எண்ணுவது முதலியன மனத்தினால் செய்யும் வழிபாடு ஆகும்.

இம்மூவகை வழிபாடுகளையும் தவறாமல் செய்து வந்தல், இறைவன் நமக்கு ஞானத்தை உணர்த்துவான். அவ்வாறு உணர்த்தும்போது, சீவன்முத்தர்களை அதிட்டித்து நின்றோ, குருநாதனாக வந்தோ, மானுடச் சட்டை போத்தியோ வந்து உணர்த்துவான். எனவே, குருபீடத்தில் அமர்ந்துள்ள ஞானிகளை வழிபடுவது ஞானநெறியில் செய்யும் வழிபாடாகும்.

மனம், வாக்கு, காயங்களால் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது. இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம்
ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக் காக அன்றோ" (182)

என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.

தெய்வ வழிபாடு என்பது யாது?

ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வவடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான்.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார்,

‘‘மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்
சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்
மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே"(114)

என்று தெளிவுபடுத்தியுள்ளது.
‘இச்சித்த தெய்வம்' என்பது வழிபடுவதற்குத் தேர்ந்து எடுத்துக்கொண்ட வடிவம் என்பதாகும். ‘செயல் அறம்' என்பது, (122) ஆம் தடைக்குள்ள விடையில் கூறியுள்ள பதினாறு சைவ ஒழுக்கங்கள் ஆகும்.


மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சிவலிங்க வடிவத்தையும் மட்டுமே, வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை வழங்க முடியாது. எனவே மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சதாசிவ வடிவத்தையும் மட்டுமே வழிபட வேண்டும் என்பது தெளிவாகிறது.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“யாதொரு தெய்வம் கொண்டிர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும்; பிறக்கும்; மேல்வினையும் செய்யும்;
ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே"(115)

என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
இன்னும், அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க, அவற்றால், இயலாது. இதற்கு, “அத்தெய்வம் அத்தனைக் காண்" என்னும் பிரமாணம் தெளிவாக உள்ளது.


அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி நடந்துகொண்டால் போதாதா? இறைவழிபாடு வேறு செய்ய வேண்டுமா?

அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது.
இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,
மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்
வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே"

என்று அருளிச் செய்துள்ளார்.

சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும்?

சிவலிங்கம், சிவனடியார் என்னும் இரு திருமேனிகளையும் ஆதாரமாகக் கொண்டு, சிவபெருமான் உயிர்களின் புறப்பூசையினையும் அகப்பூசையினையும் ஏற்று உயிர்களுக்கு அருள் செய்வான்.
இவ்விரு பூசைகளுள் அகப்பூசையினைப் பரிபூரண பூசையாக ஏற்று; உயிர்களின் அகத்தே முன் நின்று அருள் செய்வான். இவ்வாறு, சிவபெருமானை வழிபட வேண்டும்.

இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று
மாபரன் பூசைகொண்டு மன்உணிர்க்கு அருளை வைப்பன்;
நீ, பரன்தன்னை நெஞ்சில் நினைவையேல், நிறைந்த பூசை
ஆய், பரம்பொருளை நாளும் அர்ச்சி; நீ அன்பு செய்தே"


அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?

அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-
நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.

அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.

இதனால் பெறும் பயன் வருமாறு :-

கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.

இதற்குப் பிரமாணம் :-

சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).


சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவுமுறை எத்தகையதாக இருக்கும்?

சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ளது போன்றது. கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. யோக நெறியில், தோழனுக்கும் தோழனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவுமுறை போன்றது. இந்நெறியில் உள்ள உறவு முறை நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ளது போன்றதென சிலர் கூறுகிறார்கள்.
இந்நால்வகை நெறிகளில் உள்ள உறவுமுறை பற்றிய உண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம்,
தாதமார்க்கம் என்றும் சங்கரனை அடையும்
நன்மார்க்கம் நால், அவைதாம் ஞான யோக
நற்கிரியா சரியை என நவிற்றுவதும் செய்வர்"

என்று அருணந்திசிவம் தெளிவுறுத்தியுள்ளார்.

சரியை நெறியாகிய உடலால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

உடலால் செய்யும் வழிபாடு வருமாறு :-
1. திருக்கோயில்களில் உள்ளும் புறமும் பெருக்கித் துப்புரவு செய்தல்

2. திருக்கோயிலில் உள்ள தரையைச் சுத்தமான பசுவின் சாணம் கொண்டு மெழுகுதல்.

3. அதிகாலையில் எழுந்து, குளித்து, வண்டுகள் மொய்வதற்கு முன், கைநகம் படாமல் மலர்களை கொய்து திருக்கோயிலில் கொடுத்தல்.

4. பூமாலை தொடுக்கத் தெரியுமானால், இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டிற் கட்டுமாலை முதலிய பூமாலைகளைத் தொடுத்துத் திருக்கோயிலில் சேர்ப்பித்தல்.

5. பன்னிரு திருமுறைப் பாடல்களை வாயினால் பத்தி பரவசத்துடன் பாடுதல்.

6. பசுவின் நெய், எள் எண்ணெய் முதலியவற்றால் தீபம் ஏற்றுதல்.

7. மலர்தரும் மரங்களை கொண்ட திருநந்தவனம் அமைத்தல்.

8. சிவவேடப் பொலிவு உடையவரைச் சிவனாகவே நினைந்து வழிபடுதல். இதற்குப் பிரமாணம், சிவஞானசித்தியார் (271) ஆகும்.


கிரியைநெறி ஆகிய மனமும் உடலும் கொண்டு செய்யும் வழிபாட்டில் (பெரும்பாலும் வாயினால் செய்வது) என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

இ•து, ஏறத்தாழ நமது இல்லங்களில் செய்யும் வழிபாடு ஆகும். வீட்டிலுள்ளவர்களது உதவியோடு வேண்டிய உபகரணங்களை அமைத்துக்கொண்டு, வழிபடு தெய்வத்தை (உபாசன மூர்த்தம்) வீட்டில் நிறுவி வழிபடுவது. அப்போது திருமுறைகளைக் கலந்த அன்பாகிக் கசிந்துருகிப் பாடவேண்டும்.
வீட்டில் என்னென்ன முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை சிவஞான சித்தியாரில் (272) அருணந்திசிவம் அழகுற அருளிச்செய்துள்ளார்.


யோகநெறி ஆகிய மனத்தினால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

இது சிவயோகம் ஆகும். பொறி புலன்களை ஒடுக்கி, சுவாசத்தை ஒருவழிப்படுத்தி, ஏறத்தாழ அகப்பூசை செய்யும் முறையில் சிவபெருமானோடு ஒன்றிய உணர்வோடு மனத்தைப் பழக்குவதே, யோக நெறியில் செய்யும் பணியாகும். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியார் - (272)

ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந்நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.
Read more ...