திருமந்திரம்

Wednesday, March 23, 2011
திருமந்திரம்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே



இந்த உடம்பை அழிந்து விட்டால் உயிரும் அழிந்துபோகும். அதன் பிறகு ஞானத்தை உணர்வதெங்கே? அதனோடு சேர்வதெங்கே? அதனால் அரிதாகக் கிடைத்த இம் மானிடப் பிறவி வீணாகிப் போகுமன்றோ? அதனால் இந்த உடம்பை வளர்ப்பதற்காக உபாயங்களை அறிந்து பேணிப் பாதுகாக்கத் தொடங்கினேன். உடம்பைக் காப்பாற்றிக் கொண்டதன் முலம்தான் உயிரையும் காப்பாற்றிக் கொண்டேன் என்கிறார் திருமுலர்.

அழியக்கூடியது உடல் மட்டுமே. உயிர் அல்ல. ஆன்மாவுக்கு அழிவில்லை என்று சமயங்கள் கூறுகின்றனவே. கண்ணபிரான் கீதையில் இதைதானே அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார். திருமுலர் உயிர் அழிந்துவிடும் என்று கூறியுள்ளது முரண்பாடல்லவா? என்று கேட்கலாம்.

உடல் இருந்தாலே உயிர் இயங்க முடியும். ஆன்ம விடுதலைக்காக உழைக்க முடியும். உடல் போய்விட்டால் அதன் பிறகு உயிருக்குச் செயல்பாட்டுத் திறன் ஏது? இந்த உண்மையையே ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறார் திருமுலர்.

பிற சமயத்தவர்கள் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். அப்போதுதான் மெய்ஞ்ஞான நெறியில் செல்ல முடியும் என்று கூறுகின்றனர்.

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை


அடக்கடக் கென்பர் என்ற சொல் நயம் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும் அடக்க வேண்டும் என்று மற்றவர்கள் திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கூறந் தன்மையை அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் அறிவில்லாதவர்கள் என்கிறார்.

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்.
அவர்களை ஏன் அறிவில்லாதவர்கள் என்று கூறுகிறேன் என்றால்

அஞ்சும் அடக்கம் அமரரும் அங்கிலை.
ஐம்புலன்களை அடக்கியவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நீங்கள் கூறும் தேவலோகத்திலும் இல்லை. கடவுளின் முன்று உலகங்களிலும் இல்லை. பின் எதற்காக அப்பாவி மனிதனை மட்டும் அஞசும் அடக்கு அடக்கு என்று கூறுகிறீர்கள்?

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கி அசேதன மாமென்றிட்
டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே!

அஞ்சும் அடக்கினால் ஓரறிவும் இல்லாத சடப் பொருளாகி விடுவாய். (அசேதனம் = அறிவின்மை) அதனால் அஞ்சும் அடக்குவதால் பயனில்லை. அவற்றோடு கூடியிருந்தே வாழ்க்கைப் பயனை அடைய வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன் என்கிறார் திருமுலர் பிரான்.

வாழ்க்கைகு ஏற்ற தத்துவம்! மனிதன் நெறிப்படி நடந்து மற்ற அறங்களையும் கடைப்பிடித்து வந்தால் அவன் அடைய வேண்டிய நற்பயனை அடைந்து விடமுடியும் என்பதே சித்தர் நெறி.

உடலைப் பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த உடம்புக்குள்ளேதான் இறைவன் இருக்கிறான். அவனை அறிந்து கொள்ள முற்பட வேண்டும்.

தானென்ற வஸ்துவையும் தவிர வேறே
சாதகந்தான் இல்லை யென்று சஞ்சலித்து
பானென்ற சத்தியமாம் வாக்குக் காயம்
பத்தியுடன் சுத்தமதாய்ப் பதிவாய் நின்று
ஆனென்றே இருக்கிறதை ஆத்திக மென்பார்
அன்னாதார சரீரத்தைச் சுலப மாக்க
கோனென்று நிதானித்துப் பின்னை யொன்று
கூறாதே சூத்தரம் என்று சொல்லே.


அகஸ்தியர் வாத சௌமியம்

இந்த உடல் இருக்கிறதே இது அன்னத்தையே ஆதாரமாகக் கொண்டது. உணவு இல்லையென்றால் உடலும் இல்லை. அதனால் உண்டு உடலைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளத்தை ஒருமுகப் படுத்தி உடம்பாலும் உரையாலும் உண்மை நெறி தவறாமல் சுத்தமாய்ப் பதிவாய் நிற்பதே ஆத்திகம் என்று கூறுகிறார் அகத்திய மாமுனிவர்.
Read more ...

மாயை - சிவசித்தன்

Saturday, March 12, 2011
மாயை

என்பது பற்றிப் பெரும்பாலும் எதிர்மறையாகவே பொருள் கொள்ளப்படுகிறது. மாயை என்பது அறியாமை, நிலையாமையை நிலைத்தவை எனக் கொள்ளும் மயக்கம், மாயையிலிருந்து விடுபட்டால்தான் பிரம்மத்தை அறிதல் சாத்தியம் என்று மாயை என்பதே துறக்கப்பட வேண்டிய ஒன்று என்பதுபோல் எல்லாம் எண்ணங்கள் வேரூன்றியிருக்கின்றன.
உண்மையில் மாயையே பிரம்மத்தை அறிவதற்கான திறவுகோலாக உள்ளது.
மாயையானது, அது உள்ளளவும் சாசுவதமானதாகவே உள்ளது. சங்கரரின் கயிறும் பாம்பும் நியாயம் இதைத்தான் சொல்கிறது.
அதாவது கயிறு பாம்பாகத் தெரியும் வரை அது பாம்பாகவே உணரப்படுகிறது. அவ்வாறு உணரும் பரியந்தம் அது வாஸ்தவமாகப் பாம்பாகவே உள்ளது. மட்டுமல்ல. பாம்பாக இருந்ததுதான் கயிறாகவும் உள்ளது. அதாவது இரண்டுமே ஒன்றுதான்.
நமது பார்வையின் தன்மைக்கேற்ப, சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப, அது வெவ்வேறாகத் தென்படுகிறது. இதுதான் கயிறு-பாம்பு நியாயத்தின் உட்பொருளாகும்.
இதை இன்னும் விவரித்தால் கயிறு-பாம்பு இரண்டுமே நிஜம், அவையவற்றின் காலப் பிரமாணப் பரியந்தம் அவை நிஜமாக இருக்கும், இருக்க வேண்டும். கனவானது கனவு காணும்வரை தத்ரூபமாகவே உள்ளது. விழிப்பு நிலை வருகையில்தான் கனவு என்பது உறைக்கிறது. விழிப்பு நிலை வராது கனவு நீடிக்கும்வரை அது தன்னளவில் நிஜமான ஒன்றாகவே உள்ளது.
ஏனெனில், மாயை என்பது உறைநிலையில் உள்ள சக்தியைப் போன்று ப்ரம்மத்தின் வெளிப்படாத நிலையே ஆகும். மாயையை பிரம்மத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதால்தான் அது ஒரு வேண்டாத அம்சம்; பிரம்மத்தைக் காணவிடாமல் மறைக்கும் இடையூறு என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.

என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன், மம மாயா என்றும் தைவீ மாயா என்றும் இந்த மாயையைப் பற்றிக் குறிப்பிடுகிறான். மம என்றால் என்னுடைய என்றும் தைவீ என்றால் தெய்வீகமான என்றும் பொருள்படும்.
ஏஷா என்றும் மாயைக்கு ஒரு அடைமொழி கொடுக்கிறான். அதாவது புலன்களால் உணரக் கூடியது. கண்களால் காணவும், செவிகளால் கேட்கவும், சருமத்தால் உணரவும், மனதால் புரிந்துகொள்ளக் கூடியதுமான மாயை. ஆக, மாயையின் வடிவில் உனக்கு எந்நேரமும் நான் காட்சியளித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நமக்கு உறுதி கூறுவதாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
என்னை வெளிப்படுத்திக்கொள்ளாத பிரம்மமாக இருக்கையில், நானே மாயையாக இருக்கிறேன் என்றும் ஸ்ரீ க்ருஷ்ணன் தெளிவாகவே குறிப்பிடுகிறான்.
மாயையை நாம் அன்னையின் வடிவிலேயே உணர்கிறோம். மஹா மாயை என அவளைத் துதிக்கிறோம். ஸ்ரீ க்ருஷ்ணன் பெண்மையின் குணாம்சத்தை வெளிப்படுத்துகையில் அவ்வாறாக அமைகிறான் என இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆணானாலும் பெண்ணானாலும் இருவர் உடம்பிலுமே ஆண்-பெண் ஹார்மோன்கள் இருப்பது, அவற்றின் விகிதாசாரம் அமைவதை ஒட்டியே ஆண், பெண் நிர்ணயம் ஆகிறது. ஆனாலும், பரஸ்பரம் ஆண் பெண் தன்மைகள் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருப்பதையும் உடற்கூறு விஞ்ஞானம் தெரிவிக்கிறது.
இதேபோல் அவசியமான தருணங்களில் தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றிக்கொள்ளும் ஜீவராசிகளும் உள்ளன. மண்ணுக்கடியில் அடைகாக்கப்படும் நிலையில் உள்ள முதலையின் முட்டைகளுக்குள் வளரும் குட்டிகள் அவையவை வைக்கப்பட்டுள்ள அடுக்குகளின் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப ஆணாகவும் பெண்ணாகவும் பிறவி எடுக்கின்றன. சில தாவரங்களிலும் ஆண் பெண் தன்மைகள் ஒரு சேர இருந்து எப்போது எது அவசியப்படுகிறதோ அப்போது அது வெளிப்படுவதாக இருக்கிறது. .இவ்வளவும் சொல்லக் காரணம், ஸ்ரீ க்ருஷ்ணனே அவசியம் கருதி மஹா மாயையாகவும் இருக்கிறான் என்பதை நினைவூட்டத்தான்.
மாயையை அறிந்து, மாயையை உணர்ந்து, மாயையை அனுபவித்து, மாயையைக் கொண்டாடி, அதன்பின் மாயையைக் கடந்து செல்லப் பழக வேண்டும். மாயையை வெறுத்து அல்ல, மாயையை துவேஷித்து அல்ல, மாயையை அறியாமை என நினைத்து அல்ல, மாயையை இடையூறு என எண்ணியல்ல.
மாயையானது அசுத்தமானது, ஜீவாத்மாக்களுக்கே அது உரித்தானது என்றெல்லாம் எண்ணிப் புறந் தள்ளத் தேவையுமில்லை. அதிலும் இறைச் சக்தி உறைந்து இருப்பதை உணர்த்துவதற்காகத்தான் திருமாலின் செவி அழுக்கிலிருந்து வெளிப்பட்ட அசுரர் கதையைப் புராணம் சொல்கிறது. மேலும் அசுத்தம் அவசியமான உணவாகவும் சில ஜீவராசிகளுக்கு அமைகிறது.
மாயை என ஒன்று இருப்பதால்தான் பிரபஞ்சம் இருக்கிறது. அதன் இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் காரணமாகத்தான் இயற்கையின் மகத்தான சாதனைகளை அனுபவிக்க முடிகிறது.
சரி. இவ்வாறெல்லாம் மாயை செயல்பட வேண்டிய அவசியம் என்ன? இப்படியொரு லீலைக்கு என்ன அவசியம்?
இதற்கு விடை தேடித்தான் மெய்ஞ்ஞானிகள் காலங்காலமாக சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். விஞ்ஞானிகளும்தாம். நாத்திகர்களுக்குப் பிரச்சினை இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று போய்விடலாம்.
மாயை என்பது உறை நிலையில் உள்ள பிரும்மம் என்று ஸ்ரீ க்ருஷ்ணன் உணர்த்தியிருக்கிறான். இதில் உள்ள ஒரு நுட்பமான விஷயம், பிரும்மம் உறைநிலையில் இருக்கும்போதுதான் மாயையாக, சக்தியாக இயங்கி பலவற்றையும் தோற்றுவிக்கிறது !
பிரும்மம் இயக்க நிலையில் இருக்கிறபோது செயலற்றதாக அதாவது ஒருவர் சமாதி நிலையில் இருப்பதுபோல நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கிறது!
முரண்பாடு போலத் தோன்றும் இந்த உண்மையை வார்த்தைகளால் புரியவைப்பது கஷ்டம். என்னை நான் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளாதபோது மாயையாக இருக்கிறேன் என்று என் எஜமானன் ஸ்ரீ க்ருஷணன் சொல்வதைத்தான் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இறைச் சக்தி தன்னை பகிரங்கமாக வெளிப்படுதிக் கொள்ளாமல் மாயையான பிரபஞ்சத் தோறறங்களின் மூலம் தன் இருப்பை சூசகமாக உணர்த்துகிறது.
இதைப் புரிந்துகொண்டதால்தான் ஞானியர் ஜடப் பொருள் உள்ளிட்ட சகலத்திலும் இறைச் சக்தியைக் காண்கின்றனர். இதில் சுயமும் அடக்கம். மாயை என்று எதையும் தூஷிப்பதில்லை.
அத்வைதம், த்வைதம் இரண்டுமே இதில்தான் வந்து ஒடுங்குகின்றன.

நானே கடவுள் என்பது அத்வைதம் அல்ல. மாயையின் நிலையில் சகலத்திலும் பிரதிபலிக்கும் பிரும்மம் என்னுள்ளும் பிரதிபலிக்கிறது என்பதை உணர்தலே அத்வைதம். நீர்த்துளியில் சூரியன் பிரகாசிப்பதுபோல. நீர்த்துளி இருக்கும்வரை சூரியனும் அதில் இருக்கும். நீர்த்துளி உலர்ந்துபோகையில் அதில் உள்ள சூரியனும் மறையும். ஆனால் சூரியன், தொடர்ந்து விண்ணில் பிரகாசித்துக்கொண்டு இருக்கும்.
மாயா லீலையின் நோக்கம் பரிணாமம் என்றால் பரிணாமத்தின் நோக்கமும் அவசியமும் என்ன என்பது அடுத்த கேள்வியாகும்.
படிப்படியாக முதிர்ச்சிபெற்று இறுதியாக ஆன்மிகத்தில் முழுமையாகத் தோய்தலே அதன் நோக்கமும் அவசியமும் என்றால் அதற்கும்தான் என்ன அவசியம்? பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டு அரும்பாடுபட்டு மேலே ஏறிவரச் செய்யும் விளையாட்டு குரூரமாக அல்லவா இருக்கிறது?
முயற்சி செய், முயற்சி செய், முயற்சி செய்துகொண்டே இரு, அதற்கான பயிற்சியே அது. நீச்சல் பழக வேண்டுமெனில் நீரில் தள்ளிப் பழக்குகிற மாதிரி.
சிரத்தையும் விடா முயற்சியும் இருந்தால் மாயையின் இறுதி நோக்கமும் அவசியமும் மறைந்திருக்கிற பிரபஞ்ச ரகசியம் புரிந்துவிடும். இன்றைய விஞ்ஞானம் அதை நோக்கித்தான் வெகு விரைவாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதற்குள் மனிதன் தனது அகந்தையாலும் பேராசையாலும் பொறுப்பினைமையாலும் சூழலை நாசம் செய்து காரியத்தைக் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும்.
மஹா மாயையின் லீலா வினோதங்களை நாம் அனுபவித்து மகிழலாம் (வலி, வேதனைகள் உள்படத்தான்! உடல் நோவையும் பிற துயரங்களையும் அனுபவிக்க நேர்கையில் பெரியவர்கள் தமது கர்ம வினைகள் கரைந்து போவதாகவே அதனைக் கருதி மகிழ்கின்றனர். இறைச் சக்திக்கு நன்றி தெரிவிக்கின்றனர். மற்றவர்கள்தான் இதற்கு மாறாக ஆண்டவனே உனக்குக் கண்ணில்லையா என்று புலம்புகின்றனர்).
அதன் ரகசியம் புரிந்தாலும் பிறருக்கு வார்த்தைகளால் புரிய வைக்க இயலாது. அவரவரும் தாமே முயற்சி செய்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயமிது. வாதப் பிரதிவாதங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை.
Read more ...

பிரபஞ்ச சக்திகளில் நான்கு

Saturday, March 12, 2011
பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து இவ்வுலகைத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள்
முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான். ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,மகாவிஷணு, மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினர். இந்த நால்வரையும் சதுர்வேதங்கள் என்றும்
குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணங்களும் ஆவர். பாரசக்தி, பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகேஸ்வரன்
இவர்களின் சக்திகளைக் கொண்டு அறிவியல் நிபுணர்கல் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாக சுட்டிள்ளனர்.


பராசக்தி - கரியமிலா வாயு [ Carbon Dioxide ]
மகாவிஷ்ணு - பிராண வாயு [ Oxygen ]
பிரம்மதேவன் – நைட்ரஜன் [ Nitrogen ]
மகேஸ்வரன் – ஹைட்ரஜன் [ Hydrogen
Asrto Physics என்ற விஞ்ஞான ஆய்வின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துகொள்ளலாம்.
திரிமூர்த்தி என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் “எலக்ரோன்” (Electron ), ”நியுட்ரோன்”,(Neutron)
, “புரோட்டன்” (Proton) - என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே.

எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்து விட்ட மையப்
புள்ளியாக ஆகிறார். புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமையின் கீழ் பிரம்மதேவன்
சிருஷ்ப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்பவராகவும்
பொறுப்பேற்றனர்.

நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயமாக ஆதிபராசக்தி திகழ்கின்றாள்.
அவளுக்கு துணையாக :-
“ எலக்ரோன்” (Electron), - பிரம்மதேவனும்,
” நியுட்ரோன்”, (Neutron), - விஷ்ணுவும்,
“ புரோட்டன்” (Proton) - மகேஸ்வரனும்,….,
-- விளங்குகின்றனர்.
இதை கண்ணுறும்போது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் வெளியான அரும்பெரும்
தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாக விளங்குகிறது.

மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். “கார்பன்’ தான் உலகில் சக்தி பெற்ற உலோகம்.
இந்த உலோகமே காந்த சக்தி பெற்ற உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில் அதிகமாக இருப்பதால்
மற்ற கிரங்களையும் அதைச் சுற்றி வரச் செய்கிறது.

பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோதுதான் முதன் முதலில் இரும்பு சக்தி வெளியானது.
இரும்பு சக்தி மகாலெட்சுமி. மகாலெட்சுமி கருமை நிறமாகக் காட்சி தந்தாள். அதுவே கார்பனாகிய
இரும்பு சக்தி. இதிலிருந்து செம்பு, சொர்ணம், கனகம், வைரம் வெளியானது என்பது இங்கு
குறிபிடத்தகக்கதாகும். மகாலெட்சுமி என்ற இரும்புச் சக்தியைக் காப்பாற்றவே விஷ்ணு வந்தார்.
உலகின் ஒப்பற்ற சக்தியான இரும்புச் சக்தியைப் பத்திரப்படுத்த வேண்டும்.
பாற்கடலில் பிறந்த பாவையான மகாலெட்சுமி கருநெய்தல் பூவால் புனைந்த
மாலையை ஏந்தி, உவந்து திருமாலுக்குச் சூட்டி அவனைத் தழுவினாள்
இச்செய்தி செவ்வை சூடுவார் பாகவத்தில் இடம் பெற்றுள்ளது.

இதனை பிரதோஷ காலத்தில் கூறி பெண்கள் வழிபட்டு வந்தால் நல்ல கணவன் கிடைப்பான்
என்றும், இப்பாடலை ஓதும் அனைவருக்கும் திருமகளின் அருள் கிடைக்கும். அப்பாடலை
இனிக் காணலாம்.

’ உளத்திடை இவ்வாறு உன்னி
உவந்திலன் எனை என்றாலும்
களிப்புறும் யானே சென்று
கலப்பன் என்று “அமலை” யாவும்
அளிப்பவன் அலங்கல் சூட்டி
அருமனை “முதலி” மார்பின்
துளிப்பு யன் மணக்கு மின்னில்
தோய்ந்தனன் துயக்கு அற்றான்.
...................................................................................................
திருப்பாற் கடலைக் கடைந்த நிகழ்ச்சியை நினைவுக் கொள்ளூம் வண்ணம், இன்றும் திபேத்தியர்கள்
அந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்கிறார்கள். திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் தேவர் பள்ளத்தாக்கில்
God of Valley -இல் திபேத்திகள் பெரும் திரளாகக் கூடி அதனை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
வண்ணத் தோரணங்கள் கட்டி, கொடியேற்றும் விழாவும் உண்டு.

திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் கடலைக் கடைவதாக பாவனையில் இரு பக்கதிலிருந்தும் கயிற்றை
கட்டி இழுக்கிறார்கள். இறுதியாக சுமார் 15 அடி உயரமுள்ள கொடி மரத்தை கயிற்றின் மூலம் தூக்கி
நிறுத்துகிறார்கள்.அந்த கொடி மரம் மறுவருடம் வரை இருக்கும். மறு வருடம் விழாக்கொண்டாடி புதிய
கொடி மரத்தினை நடுவார்கள்.
இமையாது உயிராது இருந்தாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
ஊழி ஏழான ஒருவா போற்றி....
-- திருநாவுக்கரசர்-
Read more ...

தீபம் ஏற்றும் முறை

Saturday, March 12, 2011
தீபம் ஏற்றும் முறை :

வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் கலந்து தீபமிடுவதால் செல்வம் உண்டாகும். இது மேலும் தெய்வத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
மருத்துவ குணம் நிறைந்த இம்மூன்று எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுதல் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம், மன நலம் இவையனைத்திற்கும் சுகம் விளைவிக்கக் கூடியதாகும்.

நெய், விளக்கெண்னெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களையும் எவர் ஒருவர் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் பூசை செய்கின்றனரோ அவருக்கு தேவியின் அருள் மந்திரசக்தி உண்டாகும்.

தீபம் ஏற்றும் திசைகளின் பயன்கள் :

கிழக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட துன்பம் ஒழியும். கிரகக் கோளாறுகள் நீங்கும்.

மேற்கு : இந்நிலையில் தீபமேற்றி வழிபட கடன் தொல்லை, சனிப்பீடை, கிரகதோசங்கள், சல்லியதோசம், பங்காளிப் பகை இவை நீங்கும்.

வடக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட திரண்ட செல்வம், மங்களம், திருமணத்தடை, கல்வித்தடை இவையனைத்தும் நீங்கி, சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு : இத்திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும்பாலும் அபசகுனமாகும்.

திரி ஏற்றும் முகப்பக்கம் :

ஒரு முகம் ஏற்றுவது - மத்திமம்.

இரண்டு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும்.

மூன்று முகம் ஏற்றுவது - புத்திரசுகம்.

நான்கு முகம் ஏற்றுவது - பசு பரி இனத்தைத் தரும்

ஐந்து முகம் ஏற்றுவது - செல்வத்தைப் பெருக்கும்.



திரி தரும் பலன்கள் :

பஞ்சுதிரி : குடும்பத்தில் மங்களம் நிலைக்கும்.

தாமரைத் தண்டு திரி : முன் வினைப்பாவம் நீங்கி, செல்வம் நிலைக்கும்.

வாழைத்தண்டு திரி : மக்கட் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் நீங்கி மன அமைதி ஏற்படும்.

வெள்ளை எருக்கன் பட்டைத் திரி : பெருத்த செல்வம் சேரும்

புது மஞ்சள் துணித் திரி : திருமணத்தடை நீங்கும், மலட்டுத் தன்மை நீங்கும்.

புது வெள்ளைத் துணித் திரி : தரித்திரம் நிவாரணமாகி, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.

அம்மை துதி :

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து.
Read more ...

ஆலய தரிசனம்

Saturday, March 12, 2011
வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.

ஆலய தரிசன விதி முறைகள் :

1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.

2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர்.

3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள் செபித்துக் கொண்டே கொடிமரத்தைப் பார்த்து வணங்க வேண்டும்.

4. பின்பு விநாயகப் பெருமானை தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும். இதுவும் ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.

5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர் நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே செல்ல வேண்டும்.

6. பின்பு ஈச்சுவரரின் காவல் தெய்வங்களாகிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க வேண்டும்.

7. எம்பெருமானை வணங்கி மும்முறை வலம் வர வேண்டும்.

8. வலம் வரும் போது குருவாகிய தட்சிணாமூர்த்தி சுவாமிமுன் நின்று கண்களை திறந்து அவரைப் பார்த்து வணங்க வேண்டும்.

9. அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராயக் காட்சியளிக்கும் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.

10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று, அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும், தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர் சந்நிதியில் கைதட்டியோ, ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது.
Read more ...

சிவபுராணம்

Saturday, March 12, 2011
சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உன்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
ஈசன்னடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன்யான்
கண்னுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகிமுனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் என்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்குமூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
வலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்து அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவானதத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தே ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியன்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கும் அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணிக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியெ
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் என் ஐயா அரனேஓ என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
Read more ...

பஞ்ச புராணம்

Saturday, March 12, 2011
பஞ்ச புராணம்

இடரினுந் தளிரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனி லமுதொடு கலந்த நஞ்சை
மிடறினி லடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமா
றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவாஉன தின்
னருளாவடுதுறை அரனே -- தேவாரம்
Read more ...

நந்தி

Saturday, March 12, 2011
நலம் தரும் நந்தி

கந்தனின் தந்தையைத்தான் கவணமாய் சுமந்துசெல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தை காக்க வந்தாய்
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்து எம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்:களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப் பூவை சூடிடும் நந்தி தேவா
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
தஞ்சையில் பெரியநந்தி தளிருடன் வெண்ணெய் சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி
தஞ்சடனாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்.
Read more ...

வழிபாடு

Saturday, March 12, 2011
சண்டீஸ்வரர் வழிபாடு

பொன்னக் கடுக்கை முடிவேய்ந்த
புனிதற்கு அமைக்கும் பொருள் அன்றி
மின்னும் கலன்ஆடைகள் பிறவும்
வேறுதமக்கு என்று அமையாமே
மன்னாந் தலைவன் பூசனையின்
மல்கும் பயனை அடியார்கள்
துன்னும்படி பூசனை கொள்ளும்
தூயோன் அடித்தா மரைதொழுவாம்.
Read more ...

பிரதோச விரதம்

Saturday, March 12, 2011
பிரதோச விரதம், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதி அன்று நீராடி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.சுவாமிக்கும், அம்பிகைக்கும் அபிசேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது சிவன் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிசேக ஆராதனைகள் பிரதோச காலத்தில் நடக்கும். அதில் கலந்து கொண்டு அருள் பெறலாம். பிரதோச பூசையன்று முதலில் நந்தி தேவருக்கு பூசை நடைபெறும். சிவபெருமான் பிரதோச காலத்தில் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு இடையே உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருநடனம் புரிந்தார்.

இப்பிரதோச வேளையில் பூலோகம் மட்டுமல்லாமல், ஈரேழுலகத்தில் வசிப்பவர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரதோசத்தின் வழிபாட்டின் சிறப்பு அம்சமாகும். குறிப்பாக தேவர்கள் தாங்கள் பிரதோச வழிபாடு செய்வதோடு அவ்வழிபாடு செய்பவர்களுக்கும் தாங்களே முன்வந்து உதவுவதாக புராணங்கள் கூறுகின்றன.

திருவாரூரில் உள்ள சிவாலயத்தில்தான் முதன் முதலில் பிரதோச பூசை ஆரம்பித்துள்ளது. தேவலோகத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தான் முதன் முதலில் இப்பூசையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். பிரதோச தினத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்து பிரதோச தரிசனம் முடிப்பது அதிக நற்பலனை அளிக்கவல்லது என்பது அனுபவத்தில் உணர்ந்த உண்மை. ‘பிர’ என்பதன் பொருள் பாவம், அந்த பாவத்தைப் போக்கும் தோசம் என்பது நேரம் என்பர் ஆன்றோர்.

பிரதோச காலத்தில் சிவபெருமான் அனைத்துப் பொருட்கள், அதாவது உயிருள்ள மற்றும் ஜடமான அனைத்துப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கின்றார். அதனால் பிரதோச காலம் என்பது அகிலாண்ட நாயகனான பரமேச்வரனை தியானம் செய்வதற்கும் அந்த ஈச்வரனையே தம் வசப்படுத்திக் கொள்வதற்கும் உகந்த காலமாகும். பிரதோச வேளையில் ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் போது உடல், மனம் இரண்டும் தூய்மை பெறுகிறது. அதனால் பல நன்மைகளும் விளைகின்றது. பிரதோச காலத்தில் சிவபுராணப் பாடலைப் பாடி வழிபடுதல் நலம்.

பிரதோச காலங்களில் ஐந்து வகையுண்டு.
1. நித்ய பிரதோசம் : தினந்தோறும் மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரையுள்ள காலகட்டமே நித்ய பிரதோசம் எனப்படும்.
2. பஷ பிரதோசம் : வளர்பிறையில் [ சுக்லபட்சம்] சதுர்த்தி திதியில் மாலைக் காலமே பஷ பிரதோசம் எனப்படும்.
3. மாத பிரதோசம் : தேய்பிறையில்
[ கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் வரும் பிரதோசமே மாத பிரதோசம் எனப்படும்.
4. மஹா பிரதோசம் : தேய்பிறையில் [கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் சனிக்கிழமையில் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹாபிரதோசம் எனப்படும்.
5. பிரளய பிரதோசம் : பிரளய காலத்தில் இவ்வுலகின் அனைத்து சீவராசிகளும் சிவனிடம் ஒடுங்கும். அதுவே பிரளய பிரதோசமாகும்.

பிரதோச பூசை செய்தால் ஒருவருக்குக் கிட்டும் பலன்கள்.
1. துன்பம் நீங்கி இன்பம் எய்துவர்.
2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.
3. கடன் நீங்கி தனம் பெறுவர்.
4. வறுமை ஒழிந்து செல்வம் சேரும்.
5. நோய் நீங்கி நலம் பெறுவர்.
6. அறியாமை நீங்கி ஞானம் பெறுவர்.
7. பாவம் தொலைந்து புண்ணியம் எய்துவர்.
8. பிறவி ஒழிந்து முக்தி எய்துவர்.

ஒரு வருட பலன் : சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோச தினத்தன்று பிரதோச வேளையாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் அன்று, முழுவதும் விரதம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் கோவில்சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.
மஹா பிதோசம் :
ஐந்து வருட பலன் : சனிக்கிழமை வரும் பிரதோச வேளையில் நாள் முழுவதும் விரதமிருந்து சிவாலயம் சென்று வழிபாடு செய்தால் ஐந்து வருடம் தினமும் தவறாது கோவிலுக்குச் சென்று வழிபடும் புண்ணியம் கிட்டும்.
பஞ்சமாபாபமும் விலகும் என்பர்.

பிரதோச காலத்தில் நந்தீஸ்வரர் பூசை.
1. ஒவ்வொரு பிரதோச வேளையிலும் சிவபெருமானை பூசிப்பதற்கு முன் நந்தியெம்பெருமானை பூசிப்பது நலமாகும்
2. பிரதோச வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் இறைவனை தரிசித்து வணங்கினால் கடன், வறுமை, நோய், பயம், மனகிலேசம், மரணவேதனைகள் நீங்குதல், புத்திர பாக்கியம் பெறுதல், காரியசித்தி பெறுதல் ஊக்கத்தை உண்டாக்குதல், சகல சௌபாக்கியங்களையும் பெறுதல் இவைகளுடன் கைலாயமும் அடைந்து இம்மை, மறுமையில் அனைத்து நன்மைகளையும் பெற்று பயனடைவர்.
3 . எனவே பிரதோச காலத்தில் நந்தியெம் பெருமானின் தரிசனமும் பூசையும் பெறும் பலனளிக்கக் கூடியதாகும்.
பிரதோச பூசையன்று முக்கிய அபிசேகப் பொருள்களும் அதன் பலனும்:
1. அபிசேக வேளையில் பால் கொடுத்தால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் கொடுத்தால் - பல வளமும் உண்டாகும்.
3. தேன் கொடுத்தால் - இனிய சாரீரம் கிட்டும்.
4. பழங்கள் கொடுத்தால் - விளைச்சல் பெருகும்.
5. பஞ்சாமிர்தம் கொடுத்தால் - செல்வச் செழிப்பு ஏற்படும்.
6. நெய் கொடுத்தால் முக்திப் பேறு கிடைக்கும்.
7. இளநீர் கொடுத்தால் - நன்மக்கட்பேறு கிட்டும்.
8. சர்க்கரை கொடுத்தால் - எதிர்ப்புகள் மறையும்.
9. எண்ணெய் தைலம் கொடுத்தால் - சுக வாழ்வு கிட்டும்.
10 சந்தனம் கொடுத்தால் - சிறப்பான சக்திகள் பெறலாம்.
11. மலர்கள் கொடுத்தால் - தெய்வ தரிசனம் கிட்டும்.
பிரதோச நாளன்று கூடியவரை விரதம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம் மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோசப் பலன் முழுமையாகக் கிட்டும்.
நந்தியெம் பெருமான் வழிபாடு.
ஐயிரு புராணநூல் அமலற்கு ஓதியும்
செய்யபன் மறைகளும் தெரிந்து மாயையான்
மெய்யறு சூள்புகல் வியாதன் ஈட்டிய
கையறு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.
நந்தீஸ்வரர் பெருமை
நந்தியெம் பெருமான் தன்னை
நாள்தோறும் வணங்குவோர்க்குப்
பக்தியால் ஞானம் சேரும்
பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கிக்
குன்றுபோல் செல்வம் சேரும்
சிந்தையில் அமைதி தோன்றும்
சிறப்புறு மக்கள் சேர்வர்
இந்திர போகம் கிட்டும்
இணையிலா வாழ்வு தானே
உளம்நிறை எண்ணம் கூடி
உயர்ந்திடும் வாழ்வு தானே.
Read more ...

பிரதோச வரலாறு

Saturday, March 12, 2011
உலகாளும் நாயகியான அன்னை பராசக்தி தன்னுடைய பீடத்தில் அமர்ந்திருக்குங்கால், தேவலோகக் கன்னிகையை நடனம் ஆடப் பணித்தார். அன்னையின் ஆவலைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அக்கன்னிகை, அற்புதமாக நடம் ஆடி அன்னையை உளம் குளிரச் செய்தாள். அன்னையும் உளம் குளிர்ந்து, அவள் நாட்டியத்தை மெச்சி, தன் கழுத்தில் அணிந்திருந்த மலர் மாலையை எடுத்து அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அக்கனிகையையும் பேரானந்தம் கொண்டு அம்மாலையுடன் செல்லும் வழியில் துர்வாச முனிவரைச் சந்திக்கிறார். அம்மாலையின் மகத்துவம் குறித்து முனிவரிடம் அப்பெண் கூறக் கேட்ட துர்வாசரும் மனம் மகிழ்ந்து அப்பெண்ணை வாழ்த்தினார். அப்பெண்ணும் அம்மாலை தன்னிடம் இருப்பதைவிட இம்மாமுனிவசம் இருப்பதுதான் சிறப்பாகும் என்றெண்ணி, அம்மாலையை முனிவர் வசம் ஒப்படைத்தார்.

துர்வாச முனிவரும் அம்மாலையை நேராக தேவலோகம் எடுத்துச் சென்று, தேவேந்திரனிடம் அம்மாலையின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறி அதை அவருக்கே அளித்தார்.

தேவேந்திரனோ, அம்மாலையைத் தன் வஜ்ராயுதம் கொண்டு வாங்கி, அதனை அருகில் நின்று கொண்டிருந்த யானையிடம் கொடுக்கிறார். யானையோ அதன் மகத்துவம் உணராமல் கீழே போட்டு காலால் மிதித்து விடுகிறது. இதனைக் கண்ணுற்ற துர்வாச முனி கடுங்கோபம் கொண்டு, தேவேந்திரனையும், தேவலோகத்தை சேர்ந்த அனைவரையும் கடுமையாகச் சபித்து விட்டுச் சென்றார். அதன் காரணமாக தேவேந்திரனும் ஏனைய தேவலோகத்தாரும், சாப விமோசனம் பெற்று, நரை, மூப்பு, மரணம் போன்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழும் ஆவல் கொண்டு நாரத முனியின் துணையுடன், பிரம்ம தேவனிடம் சென்று முறையிட்டனர்.

பிரம்ம தேவனும் அவர்களை, பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனிடம் அழைத்துச் சென்று நடந்த விவரங்களைக் கூறி, பாபவிமோசனம் நாடினர்.

திருமால் தேவர்களிடம், அவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் எடுத்து உண்டால், அவர்களின் சாபம் நீங்கி, பாபவிமோசனம் பெற்று, அசுரர்களின் பிடியிலிருந்து விலகுவதோடு, மரணம் நீங்கி என்றும் இளமையான தோற்றம் பெறலாம் என்றுரைத்தார். நாரதரும், யார் யார் பாற்கடலைக் கடைதல் நலம்தரும் என்பதனையும் திருமாலிடமே கேட்க, அவரும், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்தே கடைதல் வேண்டும் என்றும், தேவர்கள் வால் பகுதியையும், அசுரர்கள் தலைப் பகுதியையும் பிடித்துக் கடைதல் வேண்டும் என்றருளினார்.

இந்திராதி தேவர்கள் திருப்பாற்கடலை அடைந்து மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற அரவத்தை தாம்புக் கயிறாகவும் அமைத்து திருப்பாற்கடலைக் கடையும் சமயம், மந்திரகிரி மலை சாய்ந்து, கடலில் மூழ்கிப் போகும்போது தேவேந்திரன் திருமாலிடம் ஓடி முறையிடுகிறார். ஸ்ரீமந்நாராயணன் அவ்வேளையில், “கூர்ம அவதாரம் “ எடுத்து கடலுக்குள் சென்று, தன்னுடைய முதுகின்மேல் மந்திரகிரி மலையை தாங்கிப் பிடித்துக் கொள்கிறார். அந்த நாள் பத்தாவது திதியான தசமித் திதியாகும்.

பிறகு தொடர்ந்து தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்து வரும்போது, மறுநாள் 11 வது திதியான ஏகாதசித்திதியாகும். வாசுகி வலி யினால் ஏற்பட்ட துன்பம் தாளாமல் கடலில் நஞ்சை உமிழ்ந்தது. கடலிலும் நஞ்சு உண்டானது. கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி கக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து “ஆலாலம்” ஆனது. கடல் முழுவதும் நஞ்சாய் ஆனது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணு மூர்த்தியும் கடும் நஞ்சினால், நீலநிறமானார். இதைக் கண்ணுற்ற வானவர்கள் அஞ்சி, நடுங்கினர். திரும்பவும் திருமாலின் பதம் நாடினர். திருமாலும், நான்முகனும் சேர்ந்து, தேவர்களை திருக்கைலாயம் செல்லும்படிக் கூறினர். அனைவரும் ஒன்று சேர்ந்து கைலாயம் விரைந்தனர்.

திருக்கையிலையில் சிவபெருமான் சந்நிதியில் நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி, காவல் புரிந்து கொண்டிருந்தார். தேவர்கள் முதலில் நந்திதேவனை வணங்கி, திருப்பாற்கடலைக் கடையவேண்டிய காரணத்தையும், அதனால் நேர்ந்த இன்னல்கள் குறித்தும் விவரமாக நந்திதேவனிடம் கூறி, அந்த இன்னல் தீர்க்கும் பொருட்டேத் தாங்கள் அகிலாண்டகோடி நாயகனைக் காண வந்த சேதியும் கூறினர். நந்திதேவனும் இவர்களை வாயிலிலேயே நிறுத்திவிட்டு, சிவபெருமானிடம் சேதி சொல்லி, சர்வேஸ்வரனின் அழைப்பிற்குப் பிறகு தேவர்கள் , நவரத்தினமணி பீடத்தில் எழுந்தருளியுள்ள சிவ சக்தியைக் கண்டு, தங்கள் இன்னல்களைக் கூறித் தங்களைக் காப்பாற்ற வேண்டி இறைஞ்சினர்.

சிவபெருமானும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் பொருட்டு, அருகில் நின்றிருந்த தன் தொண்டனான சுந்ததரை திருநோக்கம் செய்து, “ சுந்தரா, அந்நஞ்சை, அவ்விடம் அகற்றி, இவ்விடம் கொண்டுவருவாயாக”, என்று பணித்தார். சுந்தரரும், மாலைப்பொழுதான காரணத்தினால், வானவர்கள் அணுக இயலாத அக்கொடிய விடத்தை நாவற்கனி போன்ற வடிவத்தில் திரட்டி, உருட்டிக் கொண்டுவந்து சிவபெருமானிடம் கொடுத்தார்.திரிசடைப்பெருமானோ, அக்கொடிய விடத்தை, அமரர்களான தேவர்கள் வாழும் பொருட்டு அமுதம் போல அதனை உண்டருளினார். அவ்விடம் உள்ளே சென்றால், உள் முகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமே என்றும், உமிழ்ந்தாலோ வெளிமுகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமாதலாலும், உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார்.

இக்காரணத்தினாலேயே எம்பெருமானின் செம்பொன்மேனியானது, கன்னங்கரிய மேனியானது. இக்காரணத்தினாலேயே ஐயனுக்கு, “மணிகண்டன்” மற்றும் “திருநீலகண்டர் “ என்றும் பெயர் ஏற்பட்டது. இது நிகழ்ந்தது, ஏகாதசி திதியன்று மாலைப் பொழுதாகும். சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற்கடலைக் கடையும்படிப் பணித்தருளினார். அவ்வாறே, தேவர்களும், அசுரர்களும் சென்று திரும்பவும் திருப்பாற்கடலைக் கடைய முற்பட்டனர்.

தேவர்கள் கடையும் போது, அதிலிருந்து, இலட்சுமி ஐராவதம் என்ற வெண்யானை, காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைஸ்வரம் என்ற குதிரை முதலானவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. இலக்குமியைத் திருமால் எற்றருளினார். மற்றவற்றை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தேவர்கள் தொடர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்தனர். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றலாயிற்று ! தேவர்கள் அதனைப் பகிர்ந்து உண்டனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சியில் ஆடியும், பாடியும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து , இவற்றுக்குக் காரணமான ஈசனையே வணங்க மறந்து விட்டனர். பிறகு பிரம்மதேவர், தேவர்களின் தவறை உணரச் செய்து, அவர்களை சிவபெருமானிடம் சென்று பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளும்படி வேண்டச் செய்தார்.

பரம்பொருளான எம்பெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டு திருக்கயிலையில் அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரையிலான, பிரதோச வேளையில் தம் திருமுன் இருந்த ரிசப தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று அம்பிகையைக் காண திருநடனம் செய்தருளினார்கள். தேவர்கள் அதைகண்டு பேரானந்தம் கொண்டு, சிவபெருமானை வணங்கினர். அதுமுதல், திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோச காலம் என்று வழங்கலாயிற்று. இது கார்த்திகை மாதம் சனிக் கிழமையன்று நடந்ததால் சனிப்பிரதோசமாகும். பிரதோசம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியதாம். அனைத்து உலக ஜீவராசிகளும், தேவர்களும், விஷ்ணு, பிரம்மா என்று அனைவரும் ஒன்று சேர்ந்து விரதம் இருந்த நாள்தான் பிரதோச நாளாகும்.
Read more ...

திருமாலின் தசாவதாரம்

Saturday, March 12, 2011
வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.


மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.


கூர்மாவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.


வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.


நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.


வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.


பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.


ராமாவதாரம்: ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.


பலராம அவதாரம்:
கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.


கிருஷ்ணாவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.


கல்கி அவதாரம்:
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
Read more ...

ஆன்மீகம்

Friday, March 11, 2011
இந்து மதத்தின் மூலமாக,அதிலுள்ள இதிகாசம் புராணங்கள் மூலமாக, வாழ்ந்து மறைந்த - வாழ்ந்து காட்டிய,நமக்கு உபதேசம் செய்த ஞானிகள்,  மகான்கள் , மகரிஷிகள் , சித்தர்கள் எண்ணற்றோர். அன்னவருள் பிரபலமான சிலரைப் பற்றி தெரிந்து கொள்வோம். 









மும்மூர்த்திகள்

1) பிரம்மா

2) விஷ்ணு

3) சிவன்







நால்வேதங்கள்

1) ரிக் வேதம்

2) யஜுர் வேதம்

3) சாம வேதம்

4) அதர்வண வேதம்






பஞ்சகன்யா

1) அகல்யா

2) தாரா

3) த்ரௌபதி


4) சீதா

5) மண்டோதரி






சப்தரிஷிகள்

1) காஸ்யபர்

2) கௌதமர்

3) பாரத்வாஜர்

4) விஸ்வாமித்திரர்

5) வசிஷ்டர்


6) ஜமதக்னி

7) அத்ரி






யோகங்கள்

1) ஸ்பர்ச யோகம்

2) பாவ யோகம்

3) ஞான யோகம்

4) மஹா யோகம்







நவவித பக்தி

1) ச்ரவணம் - காதால் கேட்டல்

2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்

3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்

4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு

    செய்தல்

5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்

6) வந்தனம் - நமஸ்கரித்தல்


7) தாஸ்யம் - அடிமையாதல்

8) ஸக்யம் - தோழமை கொள்ளல்

9) ஆத்ம நிவேதனம் - தன்னையே

    அற்பணித்தல்


ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய

ஸ்மரணம் பாத ஸேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்

ஸக்யம் ஆத்ம நிவேதனம்







பதினாறு பேறுகள்

1) புகழ்

2) கல்வி

3) ஆற்றல்

4) வெற்றி 5) நன்மைகள்

6) பொன்

7) தானியம்

8) அழகு


9) இளமை

10) நல்வாழ்வு

11) அறிவு

12) பெருமை

13) துணிவு

14) நீண்ட வாழ்வு

15) நோயின்மை

16) நுகர்ச்சி


பதினெட்டு சித்தர்கள்


குடி கொண்டுள்ள இடம்


1) திருமூலர் - சிதம்பரம்

2) ராமதேவர் - அழகர்மலை

3) கும்பமுனி - திருவனந்தபுரம்

4) இடைக்காட்டு சித்தர் - திருவண்ணாமலை

5) தன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்

6) வால்மீகர் - எட்டுக்குடி

7) பாம்பாட்டி சித்தர் - திருமுதுகுன்றம் என்ற

    விருத்தாசலம்


8) குதம்பை சித்தர் - மயிலாடுதுரை

9) கமலமுனி - திருவாரூர்

10) போகர் - பழனி

11) மச்சமுனி - திருப்பரங்குன்றம்

12) கொங்கணவர் - திருப்பதி

13) பதஞ்சலி - ராமேஸ்வரம்

14) நந்தி - காசி

15) காங்கேயர் - கரூர்

16) கோரக்கர் - பொய்யூர்


17) சட்டைமுனி - திருவரங்கம்

18) சுந்தரானந்தர் - மதுரை

இதர மஹரிஷிகள்

1) நாரதர்

2) பராசரர்

3) வியாசர்

4) வைசம்பாயனர்

5) விபாண்டகர்

6) ரிஷ்யசிருங்கர்

7) துருவாசர்


8) பரசுராமர்

9) கபிலர்

10) கண்வ மஹரிஷி

11) வால்மீகி

12) ஜனகர்

13) லோமசர்


நாயன்மார்கள்

1) ஆனாய நாயனார்

2) அதிப்பத்த நாயனார்


3) ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

4) அமர்நீதி நாயனார்

5) அப்பூதியடிகள் நாயனார்

6) அறிவாட்டய நாயார்

7) சந்தேசுவர நாயனார்

8) தண்டியடிகள் நாயனார்

9) ஏனாதிநாத நாயனார்

10) ஏரிப்பத்த நாயனார்

11) ஏயக்கொங்கலிக்காம நாயனார்


12) ஞானநாத நாயனார்

13) இடங்கழி நாயனார்

14) இளையாங்குடிமாற நாயனார்

15) இசைஞானியார்

16) இயற்பகை நாயனார்

17) காரி நாயனார்

18) கலிக்கம்ப நாயனார்

19) கலிய நாயனார்

20) கணம்புள்ள நாயனார்


21) கண்ணப்ப நாயனார்

22) காரைக்காலம்மையார்

23) கழற்சிங்க நாயனார்

24) கழரீரவிவார் நாயனார்

25) கோச்செங்கட்சோழ நாயனார்

26) கூற்றுவ நாயனார்

27) கொட்புலி நாயனார்

28) குளச்சிறை நாயனார்

29) குங்கிலியக்கலய நாயனார்


30) மணக்கணைச்சார நாயனார்

31) மங்கையர்க்கரசியார்

32) மெய்ப்பொருள் நாயானார்

33) மூர்க்க நாயனார்

34) மூர்த்தி நாயனார்

35) முனையாடுவார் நாயனார்

36) முருக நாயனார்

37) நமிநந்தியடிகள்

38) நரசிங்கமுனையரய நாயனார்


39) நேச நாயனார்

40) நின்றசீர் நெடுமாற நாயனார்

41) பெருமிழலைக்குறும்ப நாயனார்

42) பூசலார் நாயனார்

43) புகழ்ச் சோழ நாயனார்

44) புகழ்த்துணை நாயனார்

45) சாக்கிய நாயனார்

46) சடைய நாயனார்

47) சத்தி நாயனார்


48) செறுத்துணை நாயனார்

49) சிறப்புலி நாயனார்

50) சிறுத்தொண்டா நாயனார்

51) சோமாச்சிமாற நாயனார்

52) சுந்தரமூர்த்தி நாயனார்

53) திருஞானசம்பந்தர்

54) திருக்குறிப்புத்தொண்ட நாயனார்

55) திருமூல நாயனார்

56) திருநாளைப்போவார் நாயனார்


      (நந்தனார்)

57) திருநாவுக்கரசர்

58) திருநீலகண்ட நாயனார்.


59) யாழ்ப்பான நாயனார்.

60) திருநீலனக்க நாயனார்

                                                                             61) உருத்திரபதி நாயனார்.

                                                                             62) வாயிலார் நாயனார்.


                                                                             63)விரன்மிண்ட நாயனார்.

ஆழ்வார்கள்

1) பொய்கையாழ்வார்

2) பூதத்தாழ்வார்

3) பேயாழ்வார்

4) பெரியாழ்வார்

5) நம்மாழ்வார்

6) ஆண்டாள்

7) திருமழிசையாழ்வார்


8) மதுரகவியாழ்வார்

9) குலசேகராழ்வார்

10)தொண்டரடிபொடியாழ்வார்.
11)திருமங்கையாழ்வார்.
12)திருப்பானாழ்வார்.
Read more ...

ஆன்மீகம்

Friday, March 11, 2011
ஓம்

ஆன்மீகம் என்பது இறைவனின் அன்பு மூலமாக தன்னை உணர்தல் .
பழம்பாடல் ஒன்று .
விதைப்பேனோ விதைப்பினும் முளைக்குமோ ,
முளைகினும் கைக்கு கிடைக்குமோ கிடைக்கினும்
உண்பேனோ உண்பினும் விக்கிகொள்ளுமோ
ஜோதி திருஉளம் எதுவோ?


அன்றாட செயலே இறைவனால் நடக்கிறது என்பது இதனால் அறியப்படும் கருத்து.

திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை

களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
--

சிவத்தை அறிவது மாபெரும் தவம்,
சிவத்தை அறியாதவர் சவம்!
சிவன் பெயர் சொல்வது மாபெரும் தவம்;
சிவம் இல்லையேல் எல்லாம் சவம்!!
சிவம் அறிவது மாபெரும் தவம்;
சிவம் அறியாதது சவம்!!!

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு.



வாழ்க்கை உலகில் பிறந்த ஜீவராசிகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்று. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.விரும்பினாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் வாழ்ந்துதான் தீரவேண்டும். இவ்வுலக வாழ்வு நமக்கு இன்பமானதாக அமைவதும் நமது வாழ்க்கை வெற்றிப் பாதையில் செல்வதும் நமது குறிக்கோள் என்ன? இங்கு நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதைப் பொறுத்தே அமைகிறது.


உலக வாழ்வில் பல இன்பங்களும் துன்பங்களும் பகலும் இரவும் மாறிமாறி வருவதுபோல் வருவது இயற்கை. இன்பம் வருகையில் மிகவும் மகிழ்ச்சியடைவதும் துன்பம் வருகையில் துவண்டுபோவதும் அவ்வின்ப துன்பங்களுக்கு நம்மை அடிமையாக்கும் விதமாக அமையும்.


இத்தகைய நிலையில் நாம் சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஆளப்பட்டு, நமது சுயக் கட்டுப்பாட்டை இழக்கிறோம். இந்நிலையை மாற்றி நம்மை நாமே ஆளும் தன்மையை நாமடைந்தால் சுற்றுப்புற சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாழ்வு நாம் விரும்புவதுபோல் அமையும். இடையில் வரும் எந்த இன்பங்களும் துன்பங்களும் நம்மை பாதிக்காமல் நாம் சலனமற்ற சிந்தையோடு இனிமையான வாழ்வு வாழ்வதுடன் முன்னேற்றப் பாதையில் நாம் தொடர்ந்து செல்வது உறுதி.



வாழ்வில் முன்னேறவும், வாழ்வை என்றும் இன்பகரமாக அமைத்துக்கொள்ளவும் நம் முன்னோர்கள், மற்றும் கல்வி அறிவும் அனுபமும் மிக்க அன்பர்கள் பலரும் உரிய வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள். அவற்றை அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்து, குழந்தைகள் மற்றும் அனைவரும் வாழ்வில் உயர வழிசெய்வதே நமது நோக்கம்.
Read more ...