01766
Tuesday, October 30, 2012
சிவசித்தனின் வாசியோகம் செய்! நீயும் பலர் போல நலமாக வாழ்வாய். உண்மைதான் நான் சொல்வது நீ மனிதன் என்றால் இதை உணர் .மற்றவன் எதையும் எழுதட்டும். நீ ஏன் கவலை படுகிறாய். உண்மையை உணர்ந்து, உண்மைதான் என்றால் அதை செய்வாயா .நான் சொல்லவா .
உன் தாய் தந்தை இதை போல நலமாக வள வேண்டுமா ... உண்மைதான் இந்த வீடியோ தொகுப்பை பார் .மனிதனின் அணுக்களை பற்றியும், அதை நாம் உணர்ந்து, அணுவின் செயல்பாட்டை நாம் உணரும் நிலையில் வாசியை உணரலாம். தனி மரம் தோப்பாகாது .
ஆனால் ஒவ்வொரு தனிமரமும் தோப்பாகும். மனிதனை உணரும் நிலை சிவசித்தனின் வாசியோகமே .என்று மக்கள் தனித்தனியே கூறுவதை பாருங்கள் ..இன்று ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உணரவைத்து தோப்பாக மாற்றுகிறேன் . உன் உடலை அறிந்தால் நலமுடன் வாழலாம் . இறக்கும் போது உடல் நலம் பெற்று சுழுமுனை அறிந்து ஆன்மாவை உணர்ந்து, இறந்தால் இறைநிலை அறியமுடியும்.இது உண்மை. இன்றைய உலகத்திற்கு இதுதான் தேவை .பல உயிர்கள் சில நாட்களிலே இறப்பது தவறு . அவன் தன்னை அறியாமல் இறந்தால் மீண்டும் பிறப்பு உண்டு .இதுவும் உண்மை.
காலம் கடந்து செல்லும் முன் உண்மையை நீ முதலில் உணர். இதுவரை பிறந்து உள்ள யாரலும் மனிதனை உணரவைக்கும் நிலையை உணரவில்லை என்பது உண்மை. சுயம்பு என்றால் மதிப்பு அதிகம் தானே . இறுதியாக உன் அணு நான் சொல்வதை கேட்கும் . என்னை பார்த்தல் எல்லாம் நலமாக உள்ளது என்று சொல்லும் மனிதனை பார். அணுக்களை அறியாதவன் ஆண்டவனை அறியமுடியாது. அதுபோல உன் அணுவை நீ அறிந்தால் அந்த அணு சொல்லும் நான் யார் என்று.இது உண்மை . உலகில் வியாதிகள் இல்லாமல் மாற்ற நான் தயார் . நீ உண்மையானவனாக இருந்தால் காலதாமதமாகக்காதே ! பல உயிர்கள் இறந்து கொண்டு இருக்கிறது . தன்னை அறியாமல் தன் நிலை அறியாமல். இருப்பவர்களை அறியவைக்க நினைக்கிறேன் . FACEBOOK அன்பர்களே இந்த செய்தியை பரப்ப உதவுங்கள் . நன்றி. சிவசித்தன்.
சிவகுரு
Monday, June 11, 2012
குருவென் பவனே வேதாக மங்கூறும்
பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.
சிவகுரு என்று அழைக்கப்படுபவன் செந்தமிழ் மறை முறையாம் வேதாகமம் சிறந்தெடுத்தோதும் பேரின்ப வடிவினன். அவ் வடிவுடையவனாகிச் செவ்வி யுயிரினுக்குச் சிவயோகம் சேர்ப்பித் தருள்வன். அவ் வுயிர் திருவடியுணர்வு கைவந்தமையால் வேறோர் எண்ணமும் எண்ணுவதில்லை. அவ் வுயிரை அந்நிலையான் உயரச் செய்து பாசப்பசை யகற்றித் திருவடிநீழற்கீழ் வருவித்துப் பேற்றின்கண் நிலைப்பிப்பவன் சிவகுருவாவன்
பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.
சிவகுரு
Monday, June 11, 2012
உணர்வொன் றிலாமூடன் உண்மையோ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
சிவகுரு எழுந்தருளிவந்து ஆருயிர்களை
ஆட்கொள்ளும் நல்வழியாம் திருநெறிக்கு வழித்துணையாக நிற்பவன்
குலகுரு அவனே
குலதெய்வம். இவ் வுண்மை! திருஞானசம்பந்தப்பெருமானாராம் சிவகுரு எழுந்தருளப்
பாண்டிமன்னனுக்கும் பாண்டி நாட்டிற்கும்
வழித்துணையாக நின்றவர் மங்கையர்க்கரசியாராம்
குலகுரு அவரே
குலதெய்வம். இவ் வுண்மை சேக்கிழாரடிகள் அருளிய
"மங்கையர்க்குத் தனியரசி எங்கள்
தெய்வம்"1 என்ற மறை மொழியான் உணரலாம்.
குலகுரு வென்பார்
திருக்கோவில் வழிபாடு செய்வாரும், சிவதீக்கை செய்விப்பாருமேயாவர்.
அவர்கள் செம்மையாளராக
இருத்தல் வேண்டும்.
அத்தகைய பெருநிலைக்குப்
பொருந்தாத் திருந்தாமாக்களாவார் சிவ உணர்வென்பது ஒரு
சிறிதும் இல்லாத
மூடன்; முப்பொருள்
உண்மையாம் மெய்ம்மை
உணராதோன்; அருமறையாம்
திருவைந்தெழுத்துபதேசக் கணுவின்றியுள்ளோன். செந்தமிழ் வேதாகமநெறி காணாதவன்; தாழ்வெனும்
தன்மையாம் அன்பும்
பணிவும் ஒரு
சிறிதும் இல்லாதோன்;
சிவபெருமானையும் சித்தாந்த சைவத்தையும் இகழ்வோன்; பிறப்பு
இறப்புக்கு உட்படுத்தும் ஆணவச் செருக்குடையோன் ஆகிய
தன்மையாளராவர்.
Labels:
ஆத்மா,
ஆன்மீக வழிகள்,
இறைவன்,
இறைவன் படைப்புகள்,
இறைவன் கோயில்,
சிவகுரு
ஞானம்
Saturday, May 19, 2012
ஞானம்எல்லாம் யாம் பெற்ற தலத்தில் இன்று
ஞான வாக்கு உனக்கு ஈந்தோம் காலம் இப்போ
ஊனம் என்ற நிலை அகற்றும் தலத்து ஈசனும்
உபய நந்தி ஈசனின் ஆசி காக்கும் "
பொருள் : சித்தர்கள் முனிகள் சீவமாய் வழிபட்ட மாபெரும் ஸ்தலம் இது. முனி வாக்கு அருள் கொடுத்த குருவாய் (தென்முக கடவுள்-குரு தட்சிணாமூர்த்தியால் இந்த இடத்தில தான் பிருகு முனிக்கு சோதிடம் என்னும்ஆருடம் கைவல்யம் ஆனது - என்று கோவிலில் உள்ள குறிப்பை உறுதி செய்கிறார் ). அதை தொடர்ந்து பிருகு ஆகிய தானும் ஒரு சில ஞானங்கள் பெற்ற தலம் திருக்கள்ளில் (திருக்கண்டலம்) என்று குறிபிடுகிறார். இங்கு இருக்கும் ஈசனுக்கு ஊனம் (குறைபாடு) என்ற நிலையை கற்றும் வல்லமை உள்ளதாக சொல்கிறார். துணையாய் நந்தியும் ஊனம் அகற்றும் ஆசியை ஈசன் உடன் சேர்ந்து ஈந்து பக்தர்களை காத்து வருகிறார்.
ஞான வாக்கு உனக்கு ஈந்தோம் காலம் இப்போ
ஊனம் என்ற நிலை அகற்றும் தலத்து ஈசனும்
உபய நந்தி ஈசனின் ஆசி காக்கும் "
பொருள் : சித்தர்கள் முனிகள் சீவமாய் வழிபட்ட மாபெரும் ஸ்தலம் இது. முனி வாக்கு அருள் கொடுத்த குருவாய் (தென்முக கடவுள்-குரு தட்சிணாமூர்த்தியால் இந்த இடத்தில தான் பிருகு முனிக்கு சோதிடம் என்னும்ஆருடம் கைவல்யம் ஆனது - என்று கோவிலில் உள்ள குறிப்பை உறுதி செய்கிறார் ). அதை தொடர்ந்து பிருகு ஆகிய தானும் ஒரு சில ஞானங்கள் பெற்ற தலம் திருக்கள்ளில் (திருக்கண்டலம்) என்று குறிபிடுகிறார். இங்கு இருக்கும் ஈசனுக்கு ஊனம் (குறைபாடு) என்ற நிலையை கற்றும் வல்லமை உள்ளதாக சொல்கிறார். துணையாய் நந்தியும் ஊனம் அகற்றும் ஆசியை ஈசன் உடன் சேர்ந்து ஈந்து பக்தர்களை காத்து வருகிறார்.
கண்ணிகள்
Saturday, May 19, 2012
பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன் வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி. 8 துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள் இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி. 9 வஞ்சகம்பொய் சூதுகொலை மானார் மயக்கமெனும் சஞ்சலதை நீங்கித் தனித்திருக்கத் தேடுறண்டி. 10 ஆசைப் பெருக்காறதில்வீழாது உன்பந்த பூசைப் புரியப் புலம்பித் தவிக்கிறண்டி 11 ஊணுறக்கம் இன்பதுன்பத் துஉற்றவினை யைஒழித்துக் காணுதற்கு எட்டாப்பொருளைக் கண்டு மகிழ்ந்தனடி 12 பஞ்சபூதாதிப் பகுப்புகள்பொய் யென்றுணர்ந்துன் செஞ்சரணக் கஞ்சம் அதைத் தேடி அலைகிறண்டி 13 ஆசை ஒழிந்தும் அருள்ஞானம் கண்டு அறிந்தும் பேசத் தெரியாமல் பேய்போல் அலைகிறண்டி. 14 ஆங்காரம் விட்டு அருள்வெளியைக் கண்டு அடுத்து நீங்காப்பே ரின்ப நிலையறித் தேடுறண்டி? 15 சருவம் பிரமம் எனத் தான்தெரியுந் தன்மை மருமம் கா ணாமல் மயங்கித் திரிக்கிறண்டி. 16 ஐங்காயக் கோட்டை அதுமெய்யென்று உன்பாத பங்கயம்போற் றாமல் பரிதவித்து நிற்குறண்டி. 17 பச்சைப்பாண் டத்தைப் போலநாள் இருக்குமென நிச்சயமாய் எண்ணி நிலைதவறி வாடுறண்டி. 18 நீரிற் குமிழியைப்போல் நில்லா உடம்பினைவி சாரிக்கப் பொய் என்றே தானறிந்து வாடுறண்டி. 19 நானென்ற கர்வம் நசித்ததனைச் சுட்டறுத்துத் தான் என்ற அமிர்மந் தனைஅறிய வேண்டுறண்டி. 20 யோகந் தெரிந்ததன்றன் னுண்மை யறிவதற்குப் பாகமுண ராமற் பதறி யலைகுறண்டி. 21 மவுனத்தை உச்சரித்து மந்திரபீ டத்தேறிக் கெவுன மறிந்து கிலேசம்அதை விட்டேண்டி. 22 கற்பஞ்சாப் பிட்டே கனத்தவஞ் செய்ததினால் விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள் 23 காயசித்தி யோகசித்தி கண்டதனில் ஒண்டினதால் மாயசித்தி யாலே மயங்காது இருக்கிறண்டி. 24 ஓமென்ற அக்கரத்தின் உட்பொருளைக் கண்டுவந்தும் தாமென்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி. 25 பிரணவமும் தானறிந்து பேச்சடங்கி நின்ற சொருபந் தெரிந்தத் துலக்கத்தில் நிற்குறண்டி. 26 நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி. 27 அட்டகரு மம்தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும் இட்ட மதிற்சற்றும் இல்லாது இருக்குறண்டி. 28 நானென்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும் தான் எனலும் அற்றுத் தனியே திரிகுறண்டி. 29 எட்டாச் சுழிமுனையி லேயிருந்து என்மனதுக்கு எட்டாப் பொருளதனை எட்டிப் பிடித்தேண்டி. 30 சாகாக்கால் இன்னதெனத் தானறிந்து கொண்டதன் பின் வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி. 31 மோகாந்த காமெனும் மோகம் தவிர்ந்தன்பின் வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி. 32 சரியைகிரி யையோகந் தாண்டியபின் ஞான புரிக்கோட்டைக் குள்ளே புகுந்து திரிகுறண்டி. 33 மந்திரமுந் தந்திரமும் மாய விசர்க்கமெலாம் உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி. 34 சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத் தானறிய உத்தமியே நின்னுரு என்று ஓர்ந்தறிந்து கொண்டேண்டி. 35 | |
ஞானச் சித்தர் பாடல் -கண்ணிகள்
Saturday, May 19, 2012
சோதிச் சுடரொளியே சுத்த நிராமயமே. | 1 | |
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே நேயமுடன் ஞான நெறியைஅறி விப்பாயே. | 2 | |
முடிநடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய் மடிவில்லா மெய்ஞ்ஞான மார்க்கத் தகோசரமாய். | 3 | |
அஞ்ஞானக் காடு கடந் தாங்குவழி யேதொடர்ந்து மெய்ஞ்ஞானங் காணநின்னை வேண்டிஅலைகிறண்டி | 4 | |
நிலையில்லாப் பொய்கூட்டை நிச்சயங் கொண்டாசை வலையில் அகப் பட்டுஉழன்று வாடித் திரிகிறண்டி | 5 | |
தன்னைஅறி யாமல் தலமெட்டுங் காணாமல் அன்னை அன்னை என்று அலறித் திரிகிறண்டி | 6 | |
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல் பவநிலையில் புக்கி அகப் பட்டுஉழன்று வாடுறண்டி. | 7 |
சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல்
Saturday, May 19, 2012
சத்திய நாதர் என்ற
ஞானச் சித்தர் பாடல்
நவநாத சித்தர்களுள் ஒருவரான சத்தியநாதரே ஞான சித்தராக, சித்தர்
இலக்கியங்களில் குறிப்பிடப் பெறுகின்றார். 35 கண்ணிகள் கொண்ட இவரது
ஞான சித்தர் பாடல் மனோண்மணி துதியாகக் காணப்படுவதால் இவர் சக்தி
வழிபாட்டில் மனம் செலுத்தியவரென்பது புலனாகிறது.
நிலையில்லாப் பொய்க்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையிலகப் பட்டுழன்று வாடித்திரி கிறண்டி
என்ற கண்ணியில் உலக மாயையின் தத்துவம் விவரிக்கப் படுகின்றது. இந்த
உடல் அழகானதா? அழியாததா? வலிமையானதா? இல்லையே.
அப்படியிருக்க இதனை நித்தியமென்று கருதி என்னவெல்லாம் ஆட்டம்
போடுகிறது? யாரை யாரையெல்லாம் மாய்த்துத் தள்ளுகிறது? கண்ணதாசன்
சொல்வாரே, இன்றைக்கு செத்த பிணத்திற்காக நாளைக்கு சாகும் பிணங்கள்
அழகின்றனவே என்று. அதுபோல மற்றவை அழிவில் அவரது அழிவும்
உண்டு என்று ஏன் எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றனர்.
நீரிற் குமிழியைப் போல் நில்லாமல் மறைந்து விடுகின்ற இந்த
உடம்பினை ஒருகாலத்தில் மெய்யென்று எண்ணியிருந்தேன். பிறகு ஒருநாள்
தீர விசாரிக்கையில் அஃது பொய்யென்று உணர்ந்து கொண்டேன். அடடா,
நான்
எத்தனை பெரிய அறிவீலி என்று என்னை நானே நொந்து கொள்கிறேன்
என்று 19வது கண்ணியில் வருந்துகின்றார்.
இந்த ஞான சித்தர் மனோண்மணி அம்பிகையை வழிபட்டபின் உண்மை
ஞானம் கைவரப் பெற்றவராய் மாறியதைத் தம் கண்ணியில்
தெளிவாக்குகின்றார்.
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியையறி விப்பாயே
என்று வேண்டியதற்கு அவள் அருள் புரிந்தமையை
சத்ததிதி னுள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னருளென் றோர்த்தறிந்து கொண்டேண்டி
என்று உண்மை நிலையை உணர்ந்து கொண்டமையை உணர்த்துகின்றார்
ஞான சித்தர்.
ஞானச் சித்தர் பாடல்
நவநாத சித்தர்களுள் ஒருவரான சத்தியநாதரே ஞான சித்தராக, சித்தர்
இலக்கியங்களில் குறிப்பிடப் பெறுகின்றார். 35 கண்ணிகள் கொண்ட இவரது
ஞான சித்தர் பாடல் மனோண்மணி துதியாகக் காணப்படுவதால் இவர் சக்தி
வழிபாட்டில் மனம் செலுத்தியவரென்பது புலனாகிறது.
நிலையில்லாப் பொய்க்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையிலகப் பட்டுழன்று வாடித்திரி கிறண்டி
என்ற கண்ணியில் உலக மாயையின் தத்துவம் விவரிக்கப் படுகின்றது. இந்த
உடல் அழகானதா? அழியாததா? வலிமையானதா? இல்லையே.
அப்படியிருக்க இதனை நித்தியமென்று கருதி என்னவெல்லாம் ஆட்டம்
போடுகிறது? யாரை யாரையெல்லாம் மாய்த்துத் தள்ளுகிறது? கண்ணதாசன்
சொல்வாரே, இன்றைக்கு செத்த பிணத்திற்காக நாளைக்கு சாகும் பிணங்கள்
அழகின்றனவே என்று. அதுபோல மற்றவை அழிவில் அவரது அழிவும்
உண்டு என்று ஏன் எண்ணிப் பார்க்க மறந்து விடுகின்றனர்.
நீரிற் குமிழியைப் போல் நில்லாமல் மறைந்து விடுகின்ற இந்த
உடம்பினை ஒருகாலத்தில் மெய்யென்று எண்ணியிருந்தேன். பிறகு ஒருநாள்
தீர விசாரிக்கையில் அஃது பொய்யென்று உணர்ந்து கொண்டேன். அடடா,
நான்
எத்தனை பெரிய அறிவீலி என்று என்னை நானே நொந்து கொள்கிறேன்
என்று 19வது கண்ணியில் வருந்துகின்றார்.
இந்த ஞான சித்தர் மனோண்மணி அம்பிகையை வழிபட்டபின் உண்மை
ஞானம் கைவரப் பெற்றவராய் மாறியதைத் தம் கண்ணியில்
தெளிவாக்குகின்றார்.
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியையறி விப்பாயே
என்று வேண்டியதற்கு அவள் அருள் புரிந்தமையை
சத்ததிதி னுள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னருளென் றோர்த்தறிந்து கொண்டேண்டி
என்று உண்மை நிலையை உணர்ந்து கொண்டமையை உணர்த்துகின்றார்
ஞான சித்தர்.
Saturday, May 19, 2012
சமுதாயத்தில் புரையோடி விட்டிருக்கும் மூடப் பழக்கங்களைச் சாடும்
வித்தியாசமான சித்தராக சிவவாக்கியர் காட்சி தருகின்றார். ஆசார,
அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று தேவையற்ற மூடப்
பழக்கங்களில் மூழ்கித் தவிக்கும் மூடர்களைக் கரையேறி உய்யுமாறு
சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.
“பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)
என்று உண்மை பூசை பற்றியும்,
“வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”
என்று எச்சில் படாமல் பூசை செய்ய வேண்டும் என்று மடிசாமிதனமாகப்
பேசும் அறிவிலிக்கு எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்.
வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள மந்திரங்களும் எச்சில், பசு
மடியில் கன்று குடித்த பால் எச்சில், மாதிருந்த விந்து எச்சில், மதியுமெச்சி
லொளியுமெச்சில் மோதகங்களான தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில்
எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார்.
புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)
என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார். இன்னும்,
“மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)
“மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்” (160)
என்ற பாடலில் மாட்டிறைச்சி தின்பது பாவம் என்று அருவறுக்கும்
வேதியர்களே மாட்டிறைச்சிதான் உரமாக காய்கறிக்கிடுவதை அறிவீர்களா?
ஆட்டிறைச்சி தின்றதில்லை என்கிறீரே, உங்கள் யாக வேள்வியில் ஆகுதி
செய்யப் படுவதும், நெய்யாய் இடுவதும் எது என்பதை யோசிப் பீர்களாக
என்கிறார்.
பெரிய ஞானக்கோவை
Saturday, May 19, 2012
கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும்,
அவைகளுக்குத் தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று
தொட்டு நடந்து வருபவை. இவைகளையெல்லாம் மூடப்பழக்கங்கள்
என்று சாடுவதென்றால் எவ்வளவு துணிவு வேண்டும்? புனிதமான
அடிப்படைக் கொள்கையையே ஆட்டிப் பார்ப்பதென்றால் அதனை
அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?
இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம்
தேவைப்படுகின்றது.
ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர, நல்வழிப்படுத்த உருவ வழிபாடு தேவைப்படுகின்றது.
சட்டத்துக்கும், சான்றோர் உரைகளுக்கும் கட்டுப்படாத சிந்தைத்
தெளிவில்லாத மனிதர்களுக்கு, ஒரு வடிவத்தைக் காட்டி இதுதான்
கடவுள், இவர் உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக் காத்திருக்கின்றார். ஆகவே தவறு செய்யாதே என்று கண்டிப்
போமானால் அந்தக் கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்
கடவுள் கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்;
கடவுளின் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்
பயனாகிறது. பலரை நல்வழிப்படுத்த உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு
தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.
ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
உருவ வழிபாடு ஒரு மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம்
ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில்
இருப்பதாகவும், மண்ணில் இருப்பதாகவும், மரத்தில் இருப்பதாகவும்,
உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்பதாகும் என்று
வாதிடுகின்றனர்.
சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற
மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து,
அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே
கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான
பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ
பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்து
அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம்
படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.
இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.
உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?
“ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”
ஊரிலே வாழும் பெரிய மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள
கருத்து வேற்றுமைகளைக் களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை
அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை
இழுக்கிறீர்கள். ஒரு சிறிய உருவத்திற்கு இவ்வளவு பெரிய தேரா?
நூற்றுக்கணக்கான மக்கள் உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி
இருப்பது அறிவுடையமையாகுமா? இதனால் எவ்வளவு பொருள் விரயம்?
எவ்வளவு நேரம் வீணாகிறது?
யாருக்கும் புலனாகாத கடவுள் அறிவின் வடிவானவர். அவரே
ஆதிசித்தநாதர், அவரை சித்தத்தினால் மட்டுமே அறிதல் கூடும். அப்படி
யிருக்கையில் அவரை வழிபட என்னவெல்லாமோ செய்கிறீர்களே! தேராம்,
திருவிழாவாம், கொட்டாம், முழக்காம் - இவையெல்லாம் வெறும் புரளி.
அறிவற்றவர் செய்யும் புரளி. இதனை அறிவுடைய மக்களே ஏற்றுக்
கொள்ளுங்கள் என்று அழைக்கிறார்.
ஆனால் அவரது கொள்கையை இவ்வுலக மக்கள் ஏற்றுக்
கொண்டார்களா என்பதுதான் விளங்காத புதிர்.
அவைகளுக்குத் தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று
தொட்டு நடந்து வருபவை. இவைகளையெல்லாம் மூடப்பழக்கங்கள்
என்று சாடுவதென்றால் எவ்வளவு துணிவு வேண்டும்? புனிதமான
அடிப்படைக் கொள்கையையே ஆட்டிப் பார்ப்பதென்றால் அதனை
அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?
இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம்
தேவைப்படுகின்றது.
ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர, நல்வழிப்படுத்த உருவ வழிபாடு தேவைப்படுகின்றது.
சட்டத்துக்கும், சான்றோர் உரைகளுக்கும் கட்டுப்படாத சிந்தைத்
தெளிவில்லாத மனிதர்களுக்கு, ஒரு வடிவத்தைக் காட்டி இதுதான்
கடவுள், இவர் உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக் காத்திருக்கின்றார். ஆகவே தவறு செய்யாதே என்று கண்டிப்
போமானால் அந்தக் கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்
கடவுள் கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்;
கடவுளின் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்
பயனாகிறது. பலரை நல்வழிப்படுத்த உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு
தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.
ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
உருவ வழிபாடு ஒரு மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம்
ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில்
இருப்பதாகவும், மண்ணில் இருப்பதாகவும், மரத்தில் இருப்பதாகவும்,
உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்பதாகும் என்று
வாதிடுகின்றனர்.
சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற
மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து,
அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே
கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான
பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ
பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்து
அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம்
படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.
இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.
உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?
“ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”
ஊரிலே வாழும் பெரிய மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள
கருத்து வேற்றுமைகளைக் களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை
அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை
இழுக்கிறீர்கள். ஒரு சிறிய உருவத்திற்கு இவ்வளவு பெரிய தேரா?
நூற்றுக்கணக்கான மக்கள் உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி
இருப்பது அறிவுடையமையாகுமா? இதனால் எவ்வளவு பொருள் விரயம்?
எவ்வளவு நேரம் வீணாகிறது?
யாருக்கும் புலனாகாத கடவுள் அறிவின் வடிவானவர். அவரே
ஆதிசித்தநாதர், அவரை சித்தத்தினால் மட்டுமே அறிதல் கூடும். அப்படி
யிருக்கையில் அவரை வழிபட என்னவெல்லாமோ செய்கிறீர்களே! தேராம்,
திருவிழாவாம், கொட்டாம், முழக்காம் - இவையெல்லாம் வெறும் புரளி.
அறிவற்றவர் செய்யும் புரளி. இதனை அறிவுடைய மக்களே ஏற்றுக்
கொள்ளுங்கள் என்று அழைக்கிறார்.
ஆனால் அவரது கொள்கையை இவ்வுலக மக்கள் ஏற்றுக்
கொண்டார்களா என்பதுதான் விளங்காத புதிர்.
பெரிய ஞானக்கோவை
Saturday, May 19, 2012
1. சிவவாக்கியர் பாடல்
சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை
தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர்
கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன்
புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும்
கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில்
நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல்
கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி இவர் முதலில் நாத்திகராக
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக
மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.
சிவவாக்கியரின் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும்
சந்தத்தில் மட்டுமே ஓரளவு ஒத்துப் போவதாலும் இவர் பாடல் சாயலில்
ஏனைய சித்தர்
பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.
விக்கிரக ஆராதனை
சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப்
படுகின்றது.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த
உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள்
இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வ
மென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது
அறியாமையே யாகும் என்கிறார்.
“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”
நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல்
மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண
என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன
பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர்
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில்
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?
அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும்
அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது
போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற
மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை
கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே
என்கிறார்.
Subscribe to:
Posts (Atom)