1 . மனமும் மூச்சும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. பிரணாயமம் எனும்
எளிய மூச்சுப் பயிற்சி மூலம் மனதை எளிதில் ஒருமுகப்படுத்த முடியும். ஆனால்
பயிற்சி முடிந்தவுடன் மனம் மீண்டும் அலைபாயத் தொடங்கும.
2 . உயிர் சக்தியின் அடிப்படை மூச்சு எனப்படும் பிராணன். மனமும் பிராணனை
அடிப்படையாகக் கொண்டதே. மனம் அறிய உதவுகிறது. பிராணன் செய்ய
உதவுகிறது. இரண்டும் உதயம் ஆகும் இடம் ஒன்றே.
3 . மனதை இரண்டு வழிகளில் ஒடுக்கலாம். லயம் (மனோலயம்) என்பது தற்காலிகமாக
மனதை ஒடுக்குதல். இதனால் மனம் மீண்டும் எழும். மனத்தை உரு மாய்த்தல்
(மனோநாசம்) நிரந்தரமாக மனதை மாய்க்கும்.
4 . பிராணாயமம் போன்ற மூச்சு பய்ற்சியினால் மனதை ஒடுக்கி எண்ணங்கள் அற்று
மனதை நிலைகொள்ள செய்ய வேண்டும். அப்பொழுது நான் யார் - என்று
'விழிப்புணர்வு கொள்ளவேண்டும். இதனால் மனம் முழுமையாக அழிந்து போகும்.
5 . மனம் அழியப்பெற்று, 'தான் யார்' என்று யோகி தன் நிலைபெற்ற பின், செயல்கள்
ஏதும் இல்லை. யோகி தன் நிலை அடைந்தார்.
No comments:
Post a Comment