ஐம்பத்தோர் எழுத்து - 51

Friday, October 1, 2010
ஐம்பத்தோர் எழுத்து

சித்தர் இலக்கியங்கள், ஐம்பத்தோர் எழுத்துகளைப் பற்றிக் குறிப்பிடக் காணலாம். திரு அருட்பா அனுபவ மாலை18, திருமந்திரம்11 இடங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. சித்தர்களின் குழூஉக்குறி குறிகளில் இதுவும் ஒன்று.


“அம்பத் தொன்றில் அக்கரம் அடக்கம்”


“அம்பத்தோர் அட்சரம் அறியநீ சொல்லடி சிங்கிஅது
வஞ்ச மகர நடுச்சுழி மூன்றுமே சிங்கா”



“அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய்
ஐம்பத்தோர் அச்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்”


நமசிவாய என ஐந்தெழுத்தாய், நமசிவய+அ உ ம என எட்டெழுத்தாய், ஐம்பத்தோர் எண்களாய் இருப்பது இந்த உடலில் உள்ள உயிர். அதனைப் போற்றி வேண்டுங்கள் என்று பட்டினத்தாரும் கூறக் காணலாம்.

1 comment:

  1. please read this book...
    http://www.vallalyaar.com/?p=409

    Read about sariyai,giriyai,yogam gnanam

    ReplyDelete