பொருள் :
வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள், இந்திரன் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் வஜ்ராயுதம், பல ஆண்டுகள் நன்கு வளர்ந்து விளைந்து பருத்து பெருத்த மரத்தை வெட்டினால் அதன் நடுவில் கருமையான ரேகைகள் உடன் கூடிய தண்டு பாகம் தெரியும் இதை வஜ்ரம் பாய்ந்த கட்டை என்பார்கள், அப்பகுதியை சாதாரணமாக கோடாரியால் வெட்டுவதும். உளியினால் செதுக்குவதும் மிகவும் கடினம், அவ்வளவு அடர்த்தியாக இரும்பை போன்று அப்பகுதி இருக்கும், நம் உடலை வஜ்ரம் போல் வைத்திருக்க இந்த வஜ்ராசனம் உதவுகிறது,
பயன்கள் :
உடம்பில் 108 வர்ம ஸ்தானங்கள் உள்ளன, இதில் புட்ட பகுதியில் உள்ள வர்மங்கள் ஜீரண மண்டலத்தை இயக்குகின்றன, வஜ்ராசனத்தில் அமரும் போது இந்த வர்ம பகுதி நன்கு அழுந்துவதால் இரைப்பை. சிறுகுடல். பெருங்குடல். மலக்குடல். கல்லீரல். கணையம். பித்தப்பை ஆகிய அனைத்து ஜீரண உறுப்புகளும் துடிப்போடு இயங்கி வலிமை அடைகின்றன,
No comments:
Post a Comment