சோதிச் சுடரொளியே சுத்த நிராமயமே. | 1 | |
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே நேயமுடன் ஞான நெறியைஅறி விப்பாயே. | 2 | |
முடிநடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய் மடிவில்லா மெய்ஞ்ஞான மார்க்கத் தகோசரமாய். | 3 | |
அஞ்ஞானக் காடு கடந் தாங்குவழி யேதொடர்ந்து மெய்ஞ்ஞானங் காணநின்னை வேண்டிஅலைகிறண்டி | 4 | |
நிலையில்லாப் பொய்கூட்டை நிச்சயங் கொண்டாசை வலையில் அகப் பட்டுஉழன்று வாடித் திரிகிறண்டி | 5 | |
தன்னைஅறி யாமல் தலமெட்டுங் காணாமல் அன்னை அன்னை என்று அலறித் திரிகிறண்டி | 6 | |
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல் பவநிலையில் புக்கி அகப் பட்டுஉழன்று வாடுறண்டி. | 7 |
ஞானச் சித்தர் பாடல் -கண்ணிகள்
Saturday, May 19, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment