அதிகாலை

Friday, January 1, 2010
ஆயுள். ஆரோக்கியத்திற்கு யோகாசன பயிற்சி ஒரு அற்புத கலையாகும்

யோகாசன பயிற்சியின் மூலம் ஜீரண மண்டலம். கழிவு மண்டலம். இரத்த ஓட்ட மண்டலம். சுவாச மண்டலம். மூளை-நரம்பு மண்டலம். சுரப்பிகள் அனைத்தும் மிக துலóலியமாக இயங்குகின்றன, நாடி நரம்புகள். எலும்புகள். தசைகள் மற்றும் உடம்பில் உள்ள ஒவ்வொரு திசுக்களும் நன்கு வலிமை பெறுகின்றன,

யோகாசனம் அதிகாலை சூரியன் உதயம் ஆகும்போது செய்தால் நல்லது. சூரியன் அதிக உக்கிரமாக இருக்கும்போது யோகாசனம் செய்தால் பலன் கிடைக்காது. அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் மாலை 5.30 மணிக்குமேல் 7 மணிக்குள்ளும் செய்தால் நல்லது.

யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. எந்த வயதிலும் யோகாசனம் செய்யலாம். வயது அதிகமானவர்கள் நேரத்தை மிகவும் குறைத்து யோகாசனம் செய்யவேண்டும்.

சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக 5 மணி நேரமாவது சென்ற பிறகுதான் யோகாசனப் செய்யவேண்டும். அதிகாலை யோகாசனம் செய்வது நல்லது. புதிதாகப் பழகுபவர்கள் மாலையில் செய்யலாம். காலையில் செய்யும்போது காலைக்கடன்களை முடித்துவிட்டு அதாவது மலம் வெளியேறிய பின் செய்வது நல்லது.

காலையில் எழுந்து 2 டம்ளர் பச்சைத் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கத்தை மேற்கொண்டால் காலையில் கண்டிப்பாக மலம் வெளியேறிவிடும். அப்படியும் வெளியேறாவிடில் யோகாசனம் செய்யலாம் ஆரம்பித்த சில விநாடிகளில் மலம் வெளியேற உணர்ச்சி வரும். அப்போது மலம் வெளியேறிய பின் மீண்டும் வந்து யோகாசனம் செய்யலாம்.

No comments:

Post a Comment