மன மாற்றம் அடைய !

Friday, January 1, 2010
மாபெரும் துறவி

அழகிய வன பகுதி. தெய்வீகமான ஆசரம குடில் முன்பு ஓர் அரச மரம்.

அதன் கீழ் தனது சிஷ்யர்களுடன் அமர்த்திருந்தார் வேத வியாசர்.
துறவறம் முலம் மக்கள் சேவை செய்ய சன்யாச தர்மத்தை விளக்கும் குருகுலம் அது.

வியாசர் தனது சிஷ்யர்களுக்கு துறவறம் பற்றி போதித்து கொண்டிருந்தார். எத்தனயோ விளக்கம் கொடுத்ததும் மாணவர்களுக்கு துறவறம் பற்றி விளங்க வில்லை.

ஆசிரமம் ஒட்டிய சாலையில்.... சிறிது தூரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நடந்து சென்றார்கள்.அந்த ஆடவனின் வலது கையில் மது கிண்ணம் ,மறு புறம் பெண்ணின் தோள்பட்டையில் கைகளை போட்டிருந்தான். மது - மாது சகிதம் தள்ளாட்டத்துடன் வரும் அவனை கண்டார் வியாசர்.

பூமாலையுடன் அவர்களை நோக்கி சென்றார். இருவருக்கும் மாலை அணிவித்து, மூன்றுமுறை அவர்களை வலம் வந்து , அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார்.

சிஷ்யர்களுக்கோ பெரும் அவமானமாக போய்விட்டது. வேத வியாசர் மாபெரும் மஹான் என எண்ணி இருந்தோம் , ரிஷியானவர் ஒரு கிழ்நிலை மனிதனை வணங்கி வழிபடுகிறரே என குழம்பினார்கள்.

சிஷ்யர்களின் குழப்பதை உணர்ந்த வியாசர் ," எனதருமை சிஷ்யர்களே , நாம் எல்லாம் சிற்றின்பத்தை துறந்து பேரின்பத்தை அடைய முயல்கிறோம், ஆனால் பேரின்பம் எப்படி பட்டதாக இருந்தாலும் தேவையில்லை என துறந்து சிற்றின்பத்தில் திளைக்கும் இவர்கள் தான் பெரும் துறவியாக எனக்கு தெரிகிறார்கள். பேரின்பத்தையே துறந்த இவர்கள் தான் சிறந்த துறவிகள் இல்லையா? " என்றார்.

சிஷ்யர்களுக்கு துறவு பற்றிய புரிதல் ஆரம்பமானது...



துறவி என்பவன் அனைத்தையும் துறப்பவன் அல்ல.
பொறுப்புகளை பார்த்து ஓடுபவன் துறவியாக இருக்க முடியாது. உலகத்தில் உள்ள அனைத்துக்கும் நானே பொறுப்பு என நினைக்க வேண்டும்.

எனது எனது என கூறாமல் , உலகம் அனைத்தும் நமது நமது என கூறுபவன் துறவி.

காவி உடையும் , கமண்டலமும் ஒருவனை துறவியாக்க முடியாது , "நான்" என்ற அகத்தை துறந்தவனே துறவியாவான்.

No comments:

Post a Comment