ஓம் - யோகி நிலை

Monday, July 18, 2011
ஓம் எனும் பிரணவ மந்திரம், அ + உ + ம் என்ற எழுத்துக்களின் இணைப்பே. இதில் 'அ' என்பது
விஷ்ணுவையும், 'உ' என்பது சிவனையும், 'ம்' என்பது பிரம்மாவையும் குறிக்கிறது என்பது சமயத் தத்துவமாகும்.

அஷ்ட யோகம் (அ) அஷ்டாங்க யோகம்

ஒருவன் யோகி நிலையை அடைய இவ்வெட்டு வகை யோகத்தையும் கடைப்பிடித்து வெற்றி கண்டால் மட்டுமே முடியும்.

1) இயமம் - பசியை அடக்குவது
2) நியமம் - மதத்தொடர்பான சடங்குகளை அனுஷ்டிப்பது
3) ஆசனம் - உடலை தன்வயப்படுத்தி தான் இஷ்டப்படும் நிலைக்கு கொண்டு வருவது
4) பிராணாயாமம் - மூச்சையடக்கி உடல் செயல்பாட்டினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது
5) பிரத்தியாகாரம் - புலன்களை அடக்குவது
6) தாரணை - மனதை ஒருமுகப்படுத்தி ஒன்றில் நிலைக்கச் செய்வது
7) தியானம் - அமைதியான நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி சிந்தனையே இல்லாத நிலையை அடைவது
8) சமாதி - தன்னைத் தானே ஆன்ம தரிசனம் செய்து கொள்ளும் நிலை

திதிகள்

சந்திரன் சுற்றிவர ஆகும் காலம். சந்திரனின் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் இடம்பெறும்.

சுக்கிலபட்ச திதிகள் - அமாவாசையில் தொடங்கி வரும் 15 திதிகள்
அமரபட்ச திதிகள் - பௌர்ணமியிலிருந்து தொடங்கி வரும் 15 திதிகள்

1) பிரதமை 2) துதியை 3) திருதியை 4) சதுர்த்தி 5) பஞ்சமி
6) சஷ்டி 7) சப்தமி 8) அஷ்டமி 9) நவமி 10) தசமி
11) ஏகாதசி 12) துவாதசி 13) திரயோதசி 14) சதுர்த்தசி 15) பௌர்ணமி அல்லது அமாவாசை

திருமாலின் பத்து அவதாரங்கள்

1. மச்ச அவதாரம்

கோமுகன் என்னும் அசுரன் வேதங்களைத் திருடி விழுங்கிவிட்டு மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான்.
அவனை கண்டுப்பிடித்து வதைக்க திருமால் மேற்கொண்டதே மச்ச அவதாரம்.

2. கூர்ம அவதாரம்

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற மந்தார மலையை மத்தாகப் பயன் படுத்தியபோது, அதற்கு முட்டுக் கொடுக்க திருமால்
மேற்கொண்ட ஆமை அவதாரம்.

3. வராக அவதாரம்

இரண்யாட்சன் என்னும் அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளிக்க முயன்ற போது, அதை மீட்க திருமால்
மேற்கொண்ட பன்றி அவதாரம்.

4. நரசிம்ம அவதாரம்

பக்தன் பிரகலாதனை காத்து ரட்சிக்கவும், பிரகலாதனின் தந்தை இரணியகசிபுவை சிட்சிக்கவும் திருமால் மேற்கொண்ட
அவதாரம். உடல் மனிதனாகவும், தலை சிங்கமாகவும் தோன்றிய அவதாரம்.

மேலே உள்ள நான்கு அவதாரங்களிலும் திருமாலுக்குப் பெற்றோர் கிடையாது.

5. வாமன அவதாரம்

காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு திருமால்
வதை செய்வது வாமன அவதாரம்.

6. பரசுராம அவதாரம்

ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைப்
பூண்டோடு அழிக்க முற்பட்ட அவதாரம் இது.

7. இராம அவதாரம்

அயோத்தி மன்னன் தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாய் பிறந்து, சீதையை மணம் முடித்து, இராவணனையும்
இதர அரக்கர்களையும் கொல்வதற்கு எடுத்த அவதாரம்.

8. பல பத்திரர் அவதாரம்

பல பத்திரர் கிருஷ்ணனின் ஒன்று விட்ட சகோதரர் உறவு முறை. இவருடைய தந்தைப் பெயர் வசுதேவர். அவருக்கு
தேவகி, ரோகிணி என இரண்டு மனைவியர் உண்டு. பல பத்திரர் அவதாரம் பிரலம்பன் என்கிற அரக்கனை அழிக்க நேர்ந்த அவதாரம்.

9. கிருஷ்ண அவதாரம்

வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாய்ப் பிறந்து, பாரதப் போரை நடத்தி, உலகத்திற்குத் தேவையான கீதாபதேசம் செய்த அவதாரம்.

10. கல்கி அவதாரம்

உலகை அழித்துப் புது உலகினைப் படைப்பதற்காக திருமால் மேற்கொள்ளவிருக்கிற அவதாரம் இன்னும் நிகழவில்லை.

No comments:

Post a Comment