விநாயகர் - சுலோகங்கள்

Wednesday, March 17, 2010
விநாயகரை வணங்குவோர் மேன்மைகளை அடைந்து இன்புற்று வாழ்வர்.

சுலோகம்-1

“முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்

கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்

அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்

நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்.’

விளக்கம்: திருக்கரத்தில் மோதகத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டிருப் பவரும், தம்மைத் தியானிப்பவர்களுக்கு எப்பொழுதும் மோட்சத்தைக் கொடுப்பவரும், சந்திரனை சிரசில் அணிந்தவரும், தம்முடைய வரலாற்றைச் சங்கீர்த்தனம் செய்து கொண்டு ஆனந்தமாக இருக்கும் அடியார்களையெல்லாம் காப்பவரும், ஆதரவில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் தாமே ஆதரவாக இருந்து காப்பாற்றுபவரும், கஜாசுரனைக் கொன்றவரும், தம்மைப் போற்றும் பக்தர்களுடைய பாவங்களை அக்கணமே துவம்சம் செய்ய வல்லவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.

சுலோகம்-2(பயன்)


“மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்

ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்

அரோகதாம தோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்

ஸமாஹிதாயை ரஷ்டபூதி மம்யுபைதி ஸோசிராத்.’

விளக்கம்: பஞ்சரத்தினம் என்னும் இந்த மகா கணபதி ஸ்தோத்திரத்தை எவர் ஒருவர் அனுதினமும் வைகறைப் பொழுதில் மகா கணபதியைத் தியானித்த வண்ணம் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் வெகு விரைவில் சகல வியாதிகளிலிருந்தும் எல்லா தோஷங் களிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல இசை ஞான மும், பாடும் திறனும் பெறு கிறார்கள். இவர்கள் உத்தம புத்திரர்களையும், தீர்க்கமான ஆயுளையும், அஷ்ட ஐஸ்வரியங் களையும் வாழ்வில் அடைவர்.

சுலோகம்- 3

“அகிஞ்ச நார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்

புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்

ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்

கபோலதாந வாரணம் பஜே புராண வாரணம்.’

விளக்கம்: தம்மைத் தியானிப்பவர்களின் வறுமை, துன்பம் போன்றவற்றை நாசம் செய்கிறவரும், வேத வாக்கியங்களால் போற்றப் படுபவரும், மகிமை பொருந்தியவரும், திரிபுர சம்ஹாரம் செய்தருளிய பரமேசுவரனுடைய மூத்த குமாரரும், தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் கர்வத்தை அடக்குபவரும், லோகங்களை நாசம் செய்கிற யமதர்மனுக்குப் பயத்தைக் கொடுப்பவரும், அர்ஜுனன் போன்ற வில்லில் வல்லவர்களான வீரர்களாலும் முதலில் வணங்கிப் போற்றப்படுபவரும், கபோலத்தில் ஏற்படும் மத ஜலத்தைப் பெருக விடுபவரும், புராதன கஜ சொரூபியுமான மகா கணபதியைத் தியானிக்கிறேன்.


சுலோகம்-4

“ஸமஸ்தலோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்

தரேதரோத ரம்வரம் வரேபவக்த்ர மக்ஷரம்

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்

மநஸ்கரம் நமஸ்க்ருதம் நமஸ்கரோமி பாஸ்வரம்.’

விளக்கம்: பதினான்கு உலகங்களிலுமுள்ள பக்தர்களுக்குப் பேரானந்தத்தைக் கொடுப்ப வரும், கஜாசுரனை சம்ஹாரம் செய்தவரும், சகல லோகங்களையும் வயிற்றுக்குள் வைத்து ரட்சிக்கும் பெருத்த வயிறுடன் தோற்றமளிப்ப வரும், சிரேஷ்டமானவரும், ஐராவதத்தைப் போன்ற முகப்பொலிவு பெற்றவரும், அழிவற்ற வரும், தம்மை வணங்குவோரின் பிழைகளைப் பொறுத்து அருள்புரிபவரும், அவர்களது மனதை நல்வழிப்படுத்தி அவர்களுக்குச் சந்தோஷத்தையும் நல்ல கீர்த்தியையும் அருளு பவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.

சுலோகம்- 5


“நிதாந்தகாந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்

அசிந்த்யரூப மந்தஹீந மந்தராய க்ருந்தநம்

ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்

தமேகதந்த மேகதம் விசிந்தயாமி ஸந்தகம்.’

விளக்கம்: மிகவும் அழகான பல் வரிசை களின் பேரொளியுடன் கூடியவரும், யமனுக்கும் மேலான பரமேசுவரருடைய குமாரரும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட சொரூபத்தை உடையவரும், அழிவற்றவரும், பக்தர்களின் சகல விக்னங்களையும் சம்ஹரிப்பவரும், தவசியர் களின் மனத்தில் சர்வசதா காலமும் வாசம் செய்பவரும், யானை முகத்துடன் இருந்தாலும் ஒரே தந்தத்தைப் பெற்றவருமான மகா கணபதியை எந்நேரமும் தியானிக்கிறேன்.

No comments:

Post a Comment