ஞானகுரு

Sunday, January 9, 2011
குரு என்ற வார்த்தைக்கு ஜீவன் கொடுத்தது பாரதம்தான். இந்த பாரதத்தில்தான் மனிதப் பிறப்பு என்பதே அந்தப் பிறவியின் மூலம் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்ற கோட்பாடும் காலம் காலமாக உண்டுதான். முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் படித்தாலே தெரியும். எதையும் வரமாக அளிக்கும் சக்தி வாய்ந்த ரிஷிகள் அந்த சக்தியை ஒருநாளும் தமக்கென பயன்படுத்திக் கொண்டதில்லை. வசிஷ்டரிடம் நந்தினி என்றொரு பசு வளர்ந்து வந்ததையும், அந்தப் பசு விசுவாமித்திரருடன் கூட வந்த பல்லாயிரம் வீரர்களுக்கு பசியாறச் செய்ததையும் படித்திருக்கிறோம். ஆனால் ஒருநாளும் அந்தப் பசுவிடம் தனக்காக அவர் வேண்டியதில்லை. காட்டிலே வாழ்ந்து எளிய முறையைக் கடைபிடித்து சுகதுக்கங்க்ள் தம்மைத் தாக்காதவாறு வாழ்ந்து காட்டிய புண்ணிய புருஷர்கள் அவர்கள்.

ஆனால் மனிதப் பிறவியையே ஒரு வரமாகப் பெற்ற மனிதன் சுக துக்கங்களில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறான். அப்படித் தவிக்கும்போது அவனைக் கரையேற்றுபவர் குரு ஒருவர்தான் என்பதும் கூட பாரதம் உலகுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். உண்மையான தேடலில் உள்ள ஒருவனுக்கு உடனடியாகத் தேவைப் படுவது ஒரு நல்ல குரு என்று எந்தப் பெரியவரும் உடனடியாக சொல்லி விடுவார்கள். குரு என்கிற வார்த்தையே புனிதமானது என்றுதான் நம் இதிகாசங்களும், திருமந்திரமும் சொல்கின்றன..

No comments:

Post a Comment