ஓம்

Monday, January 24, 2011
ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். அதன் பின் ஒவ்வொரு மந்திரத்தையும் நமஸ்காரம் செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.

சூரியனை முழுமுதல் கடவுளாக நம் முன்னோர்கள் போற்றி வணங்கியுள்ளனர். சங்ககால இலக்கியங்களில் சூரியனே முதற் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி விஞ்ஞான உலகின் ஜீவ நாடியாக உள்ளது. சூரிய உதயத்தைக் கணக்கிட்டுத்தான் ஜாதகப் பலன்களையும் கணிக்கின்றனர். இராகு காலம், எமகண்டம், நல்லநேரம் குறிக்கின்றனர். இதிலிருந்து சூரியனை கடவுளாக வணங்கி வந்தது நமக்கு தெரியவருகிறது. இன்று சூரிய சக்தியை மின்சாரம் முதல் அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த சூரிய சக்தி மனித உடலுக்கு மிகவும் தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கக் கூடியது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சூரியனின் அனுக்கிரகம் அவசியத் தேவையாகும்.

பொதுவாக சூரிய ஒளியின் சக்தியானது நமது உடலில் உள்ள சரும நோய்கள், மேக நோய்கள், சித்தபிரமை மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும் சக்தி கொண்டது. ஆகவே சூரிய பகவானை முறையாக வணங்கி அதன் ஆசியைப் பெறுவோம்.

சூரிய நமஸ்காரம் செய்வதில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகையில் 12 நிலைகளும், இரண்டாவது வகையில் 10 நிலைகளும் உள்ளன. இரண்டாவது வகை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் இரத்தக் கொதிப்பு, தண்டுவடப் பிரச்சனை, குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டோர் தகுதி வாய்ந்த யோகாசன நிபுணரை கலந்து ஆலோசித்த பின்பே சூரிய நமஸ்காரம்பயிற்சிசெய்யவேண்டும்.


சூரியநமஸ்காரவரிசை


1.நமஸ்காரம்ஆசனம்
2.ஊர்த்துவநமஸ்காரஆசனம்
3.பாதஹஸ்தஆசனம்
4. ஏகபாத பிரசரனா ஆசனம்(வலது கால்)
5.துவிபாதபிரசரனாஆசனம்
6.சாஷ்டாங்கஆசனம்
7.புஜங்காசனம்
8. பூதாராசனம் என ஏறுவரிசையில் எட்டு நிலைகளும்
9. ஏக பாத பிரசரனா ஆசனம் (இடதுகால்)
10.பாதஹஸ்தஆசனம்
11.ஊர்த்துவநமஸ்காரஆசனம்
12.நமஸ்காரஆசனம்

- என இறங்கு வரிசையில் நான்கு நிலைகளும் உள்ளடங்கியதாகும்


ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை நீள ஒலித்து தியானம் செய்து, சூரிய பகவானின் நாமத்தை ஓதி முறையான சுவாசத்தோடு சேர்த்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.





நிலை ஒன்று - நமஸ்கார ஆசனம்

சூரிய நமஸ்காரத்தின் நமஸ்கார ஆசனமே ஆரம்ப நிலையும் முடிவு நிலையும் ஆகும்.




செய்முறை

இரண்டு கால்களின் பெருவிரல்களை ஒன்று சேர்த்து கிழக்கு திசை நோக்கியபடி நிமிர்ந்து நிற்கவேண்டும்.

உள்ளங்கைகளை ஒன்றோடொன்று சேர்த்து, நமஸ்கார முத்திரையில் மார்போடு ஒட்டி, கைகளின் கட்டை விரல்கள் நெஞ்சுக் குழியினை தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்களை மூடி மனதில் சூரிய உதயத்தினை கற்பனை செய்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தோடு சூரிய பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.




கவனத்தில் கொள்ளவேண்டியவை

கால் பெருவிரல்கள், குதிகால்கள், கால் மூட்டுகள் தொடைகள் நேராக சேர்ந்து இருக்க வேண்டும்.




சூரிய நமஸ்காரம் தரக்கூடிய நன்மைகளை அதைச் செய்யும் ஒருவர் பெறக்கூடிய மன, உடல் ஆத்ம நலனிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment