சிவபெருமான்

Friday, January 7, 2011
சிவபெருமான் நீலநிறமானது ஏன்?

தேவர்களும், அசுரர்களும் அமுது உண்பதற்காக மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர்.

அப்போது பாற்கடலில் இருந்து ஆலகாலவிஷம் தென்பட்டது. அதே நேரத்தில் வாசுகி பாம்பும் விஸத்தை உமிழ அண்டசாராசரமும் அஞ்சி நடுங்கின. தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் சென்று தஞ்சம் அடைந்தனர்.

இரண்டு விஷத்தையும் சிவபெருமான் எடுத்து உண்டார். இதனால், அவரது உடல் நீலநிறமாக மாறியது. ஆலகால விஷத்தையே உணடதால், ஆலகால கண்டர் என்றும், அவரது உடல் முழுவதும் நீலநிறமாக மாறியதால், திருநீலகண்டர் என்றும் அழைக்க்பபடுகிறார்.

No comments:

Post a Comment