சிவபெருமான்

Sunday, January 9, 2011
சித்தம்
தெளிவான மனக் கொள்கை சித்தம் ஆகும். மனதால் உணர்ந்ததை அறிவு வயப்படுத்தி அதன்பின் மனதாலும் அறிவாலும் அறிந்த கொள்கை முடிபுகளை நிலை நிறுத்திக் கொள்வது சித்தம் ஆகும்.

''அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர
ஆனந்தம் கண்டோ ம் என்று தும்பீபற!
மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர

மேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற! 77
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற''

என்பது சித்தத்தின் தெளிவைக் காட்டுவதாகும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் வாய்த்து ஆனந்தம் காணும் நிலை சித்தநிலை ஆகும். இந்த நிலையை அடைந்துவிட்டால் துன்ப வலை இல்லை. மேலேற்றம் உண்டு.

இ¢ம்மேலேற்றநிலை பெற்றமைக்கு அமைந்த படிநிலைகளைப் பின்வரும் செய்யுளடிகள் விளக்குகின்றன. இவை முன்பே விளக்கப் பட்டவை என்றாலும் அவற்றை ஒருங்குகூட்டி இந்தப் பாடல் தருகின்றது.
- பரஞ்
சோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற! 78
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அறிவே பொருளாம் எனத் தும்பீபற!
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
தெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற! 79
மூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர
முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற!

ஐம்பொறி அடக்கி, நிறை அறிவே பொருளாகி முக்தி நிலை காணும் பேறே சித்தநிலை ஆகும். மேலும் சித்தநிலையில் தெளிவாகக் கண்ட மெய்மைகளைப் பின்வருமாறு இடைக்காடர் பட்டியல் இடுகின்றார்.

தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற! 80
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற! 81
எப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற!
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்றே தும்பீபற! 82

இவ்வடிகள் மூலமாக ''உலகப் பொருள்கள் அனைத்தும் அழியும் மாயப் பொருள்கள் ; ஆதியாகிய இறைவனே அழியாதவன் என்பதும், உலகப் பற்று நீங்கவேண்டும்'' என்பதும் ஆகிய உண்மைகள் தெரியவருகின்றன. அதாவது மூவகை மலங்களான ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றில் மாய உலகத்தின் இயல்பை மேற்காண் வரிகள் காட்டுகின்றன. இந்த மாயையை அறியும் அறிவே சித்தம் ஆகின்றது.

மாயா மலத்துடன் ஆணவமும் கன்மமும் கலந்து நிற்க வாய்ப்புள்ளது. இந்த அகக் கருவிகளின் இயல்புகளைச் சித்தம் தொடர்பான செய்திகளோடே இடைக்காடர் தருகிறார்.

No comments:

Post a Comment