சிவபெருமான்

Sunday, January 9, 2011
ஆண்டவனை அறிதல்
''எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த
வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே. 67
கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே. 68
அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே. 76 ''

ஆண்டவன் அனைத்துப் பொருள்களையும் படைத்தளித்துக் காக்கும் வல்வன். ஆனால் அவன் எந்தப் பொருளின் கண்ணுக்கும் நேருக்கு நேராய்த் தெரியாதவன். என்றாலும் அவ்வெல்லாப் பொருள்களிலும் ஒன்றாய் நிற்பவன். உயிர்க்கு முன்னவன். தோற்றுவிக்கப் பட்டப் பொருள்களுக்கு எல்லாம் முன்னவன். எல்லாப் பொருள்களையும் படைப்பதால் அவனே அன்னை. தன்னுள் பிறந்த உயிர்களைக் காக்கும் அன்னையைப் போல் அவன் விளங்கி அனைத்தையும் தன் குழந்தைகளாகக் காத்துவருகின்றான். மேலும் அவன் ''மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப் பொய்யில் ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே. (70)'' என்றவாறு மெய்யினுள்ளும் பொய்யினுள்ளும் இருப்பாகி நிற்கின்றான் என்று இருப்பிடம்¢ காட்டுகிறார் இடைக்காடர். இது ஆண்டவனை அறியும் அறிவாகும்.

1 comment: