சிவ மந்திரங்கள்

Saturday, September 25, 2010
Angry face

மனதைத் திடப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும். உரு(எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்கும் நன்மையைப் பற்றிக் கூறுகிறார்.

திரு என்றால் பிரகாசமான என்று அர்த்தம். எல்லோரையும் கவரும் காந்தசக்தி என்றும் கூறலாம். வாழ்க வளமுடன் என்பதும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமே! நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு; அதை விட திருமந்திரம், பெரிய புராணம், கந்த சஷ்டிகவசம், கந்தரலங்காரம், திருப்பாவை முதலான தமிழ் ஆன்மீகப் படைப்புகளுக்கு நாம் அவற்றை பாடும் போதும் மனதிற்குள் ஜபிக்கும் போதும் சக்தி அதிகம்.இதற்குச் சம்மான சக்தி கொண்டவையே சமஸ்கிருத மந்திரங்கள்.அவற்றில் பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம் கிடையாது.ஆனால், அவற்றை முறையாக உச்சரிக்கும்போது அது மனிதநலத்தை அதிகப்படுத்துகிறது.இது தொடர்பாக ஒலியியல் விஞ்ஞானம் என்ற புதிய அறிவியல்துறை உருவாக்கப்பட்டு இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது மாற்றும் வலிமை உண்டு என கண்டறியப்பட்டுவிட்டது.மேலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.இத்தகு ஆராய்ச்சிகள் ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து நாடுகளில் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment