கேள்வி ---பதில்

Saturday, September 25, 2010
பகவான்: அர்ச்சுனா! நான் கர்மயோகம் குறித்துப் பல விஷயங்களைச் சொன்னேன். இப்போது கர்ம யோகத்தின் சாரத்தைச் சொல்கிறேன்.எந்த மனிதன் செய்வினைப் பயன்களை( தோன்றிமறையும் பொருட்களை) துய்க்காமல் தம் கடமைகளைச் செய்து வ்ருகிறானோ,அவன் தான் துறவி.அவன் தான் யோகி.தீமை சார்ந்த கருமங்களை துறந்தவன் சன்னியாசியோ யோகியோ இல்லை.
ஆகையால் அர்ச்சுனா! உலகோர் எதைச் சன்னியாசம் ( சாங்கிய யோகம்) என்கிறார்களோ, அதுதான் கர்மயோகமென்பதை உணர்ந்து கொள்.

அர்ச்சுனன்: சன்னியாசி, யோகி -இவர்களிடம் எந்த விஷயத்தில் மகிமை உள்ளது?

கண்ணன்: சங்கற்பங்களைத் துறக்கும் விஷயத்தில் தான் உள்ளது.ஏனெனில் சங்கற்பங்களை ( செயல் தீர்மானம்)துறக்காமல் அதாவது தம் மனத்தின் ஆதிக்கத்தை விடாமல் மனிதன் எந்த விதமான யோகியாகவும் முடியாதது.

அர்ச்சுனன்: யோகியாவதற்கு முக்கிய காரணம் என்ன?

கண்ணன்: எந்த மனிதன் யோகத்தில் ( சம நிலையில்) ஆதிக்கம் செலுத்த விரும்புகிறானோ, அத்தைகைய சிந்தனை கொண்ட யோகிக்குபற்றுதல் இல்லாமல் கடமையையைச் செய்வதுதான் யோக நிலையில் திடமாக இருப்பதற்குக் காரணம்.அந்த யோகியின் அமைதிதான் ( சாந்தி) பரமாத்ம தத்துவத்தை அடைவதற்குக் காரணம்.அதாவது,உலகியல் தொடர்புகளைத் துறப்பதால் கிட்டும் அமைதியை அனுபவிக்காமல் இருப்பதே பரமாத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம்.

அர்ச்சுனன்: யோகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட யோகரூடன் எனும் சாதனையாளனுக்கு என்ன அடையாளம் பகவானே?

கண்ணன்: எந்த யோக சாதகனுக்கு புலன்களின் இலக்கான போகவிஷயங்கலும் செயல்களிலும் விருப்பமுள்ள ஈடுபாடுஇல்லையோ ,தன்னலம் வேண்டி எந்தச் சங்கற்பமும் இல்லயோ அந்தச் சிறந்த மனிதர் தான் யோகரூடர்.யோகத்திலேயே ஈடுபட்டிருப்பர்.

அர்ச்சுனன்: மனிதன் யோகரூடனாக விளங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் கண்ணா?

கண்ணன்: அம்மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளவேண்டும்.தன்னைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.மனிதன் அவனுக்கே நண்பனாகவும் பகைவானகாகவும் இருப்பவன் தனக்குத்தனே நட்பும் பகையும் ஆனவன்.

அர்ச்சுனன்: தானே தனக்கு நட்பாகவும் பகையாகவும் எப்படியாக முடியும் கண்ணா?

கண்ணன்: எந்த மனிதன் தன்னைத்தானே வெற்றி கொள்கிறானோ,அதவது எவன் “அஸத்”( உண்மையற்றது) நிலையுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறானோ,அவனே அவனுக்கு நண்பன் எவன் தனக்குத்தானே தோல்வி அடைகிறானோ,அதாவது எவன் “அஸத்” கூட தொடர்பு கொண்டிருகிறானோ அவனே அவனுக்கு விரோதி.

அர்ச்சுனன்: மனிதன் தனக்குத்தானே நண்பனானால் என்ன ஆகும் பகவானே?

கண்ணன்: எவன் தன்னைதானே வென்றிருக்கிறானோ,அவன் முன்வினைப் பயனாக ஏற்படும் நன்மை தீமைகளிலும்,நடைமுறை வாழ்வில் செய்யப்படும் செயல்களின் வெற்றி தோல்விகளிலும்
பிறர் புரியும்,மானம், அவமானங்களிலும் இருக்கிறான்.ஆகையால் அந்தத் திடசித்தனான மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! பரமாத்மவை அடைந்த மனிதனின் இலட்சணங்கள் என்ன?

கண்ணன்: அந்த மகாபுருஷர்களின் அந்தக்கரணம் ( உள் மனம்)எப்பொதும் ஞானம் விஞ்ஞானம் எனும் மெய்யறிவு சிறப்பறிவுகளல் நிரம்பி திருப்தியுடன் உள்ளது.அவனிடம் எல்லப் புலன்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. அவன் எல்லா சூழ்நிலைகளிலும் மனம் பேதலிக்கமால் விருப்பு வெறுப்புகளுக்கு இலக்காகாமல் நடுநிலையில் இருக்கிறான்.மண்ணாங்கட்டி, கருங்கல்,தங்கம் இம் மூன்றையும் சமமாக மதிக்கும் அறிவு பெற்றவன்.பொருள்களில் மட்டுமல்ல உற்றார்,உறவினர்,நண்பர்,பகைவர்,மதிப்பவர்,மதியாதவர்,பொதுவானவர்,வெறுக்கத்தக்கவர்.நல்லவர்,தீயவர்-இத்தைய எல்லோரிடமும் சமபுத்தியுடன் பழகுபவன்.இத்தைகைய சமபுத்தி உள்ளவன் மிகச்சிறந்த மனிதனாகிறான்.

No comments:

Post a Comment