கந்தர் அனுபூதி

Wednesday, September 15, 2010
"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

"காப்பு"

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் ஷண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். [1]


"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே [1]

உல்லாச நிராகுல யோகவிதச்
சல்லாப வினோதனும் நீயலையோ?
எல்லாம் அற என்ன இழந்த நலம்
சொல்லாய்; முருகா! சுரபூபதியே. [2]

வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனை ஆண்ட இடம்
தானோ பொருள் ஆவது ஷண்முகனே. [3]

வளைபட்ட கைம்மா தொடுமக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ?
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. [4]


"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறும் ஒழிந்தும் ஒழிந்திலனே:
அகமாடை மடந்தையர் என்று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே. [5]

திணியான மனோசிலை மீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்பும் அதோ?
பணியா என வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே. [6]

கெடுவாய் மனனே! கதி கேள் கரவாது
இடுவாய்; வடிவேல் இறைதாள் நினைவாய்;
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யவையுமே. [7]

அமரும் பதிகேள் அகமாம் எனும், இப்
பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா!
குமரன்! கிரிராசகுமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. [8]


"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

மட்டூர் குழல் மங்கையர் வலைப்
பட்டூசல் படும் படர் என்று ஒழிவேன்;
தட்டூடு அர வேல்சயிலத் தெறியும்
நிட்டூர! நிராகுல! நிர்ப்பயனே! [9]

கார்மா மிசை காலன் வரின் கலபத்
தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்;
தார்மார்ப! வலார் தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே! [10]

கூகா என என்கிளை கூடி அழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா !
நாகாசல! வேலவ! நாலுகவித்
தியாகா! சுரலோக சிகாமணியே! [11]

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. [12]



"கந்தர் அனுபூதி"
அருணகிரிநாதர் அருளியது!

முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே. [13]

கை வாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று
உய்வாய் மனனே! ஒழிவாய்; ஒழிவாய்;
மெய் வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. [14]

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்;
பொருபும் கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ! எண்குண பஞ்சரனே. [15]

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா! முதுசூர் பட வேல் எறியும்
சூரா! சுரலோக துரந்தரனே. [16]

1 comment: