திருநீறு -1

Sunday, November 14, 2010
*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி...*
*நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்*
*சொல்லாப்பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும்...*
*எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே..!"......பட்டினத்தார்...*
**
*"தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்*
*சங்கரா ஆர்கொலோ சதுரர்..*
*அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்*
*யாதுநீ பெற்றதொன் றென்பால் *
*சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்*
*த்ரயுபெருந்து ராயுறை சிவனே...*
*எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்*
*யானிதற் கிலன் ஒர்கைம் மாறே..".........மணிவாசகர்......*
**
*மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு*
*சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு..*
*தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு..*
*செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே...*

*"இந்தப் பாசுரத்தை கூறி கூன் பாண்டியன் தன் கொடு நோயை தீர்த்தார்".....*
**
**
*தெய்வம் செவி சாய்க்கும்...*




மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே


அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

முகத்திற்கண் கொண்டு பார்க்கின்ற முடர்காள்
அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்என்ல் சொல்லுமாறு எங்கனே.

No comments:

Post a Comment