நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
தமிழில் நாட்டுப்புற மருத்துவம் பற்றி வெளிவந்த நூல்கள் குறைவு. இவற்றில் டாக்டர். க, வேங்கடேசனின் ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம் (1976) என்ற நூலும் டாக்டர் இ. முத்தையாவின் நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள் (1986) என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை. முனைவர் க.சந்திரன் நாட்டு மருத்துவம் (2002) என்னும் நூலை எழுதியுள்ளார்.


சி.எஸ். முருகேச முதலியார் பாடம் ( 1936) என்னும் நூலில் நாட்டுப்புற மருத்துவ முறைகள் சிலவற்றை விளக்குகிறார். ஆ.ரா. கண்ணப்பர் நாட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக நம் நாட்டு மூலிகைகள் என்ற நூலில் எழுதியுள்ளார். இவரைத் தொடர்ந்து புற்றுநோய் மூலிகைகள் என்ற நூலை இரா, குமாரசாமி என்பவர் எழுதியுள்ளார்.


பி. கரேந்திரகுமார் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவையில் (1987) தஞ்சை மாவட்ட நாட்டுப்புற மருத்துவம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியுள்ளார். சோமலெ அவர்கள் ‘தழிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் (1974) என்ற நூலில் ‘மந்திரமும் மருந்தும்‘ என்ற தலைப்பில் மந்திர மருத்துவச் சடங்குகள் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். 1985-இல் ஆ. சிவசுப்பிரமணியன் ‘ஆராய்ச்சி இதழில்‘ பரதவர்களின் நாட்டு் மருத்துவம் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆறு.இராமநாதன் தமது ‘நாட்டுப்புற இயல் ஆய்வுகள்‘ (1997) நூலில் ‘நாட்டுப்புற மருத்துவம் நம்பிக்கைக்கு உகந்ததா?‘ என்றும் கட்டுரையை எழுதியுள்ளார்.


இவை தவிரப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் ஆய்வு செய்த மாணவர்கள் பலர் தமது ஆய்வுத் தலைப்பாக நாட்டுப்புற மருத்துவக் கூறுகளை எடுத்துக் கொண்டு ஆய்வேடுகளை அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment